tag:blogger.com,1999:blog-1782136595874455822024-02-18T10:34:14.060-08:00Puram1to69Tamil enthusiasts in the Washington D.C. area get together twice a month to discuss PuRanaanuuRu. At these meetings I discuss each poem in great detail. This blog contains the the first 69 poems of PuRanaanuuRu, meanings for difficult words in those poems, commentaries on those poems and other related information as presented by me in those meetings. For poems 70 and onwards, please visit my blog http://Puram400.blogspot.comமுனைவர். பிரபாகரன்http://www.blogger.com/profile/08741873196318750290noreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-178213659587445582.post-46757211921992672072023-12-15T19:06:00.000-08:002023-12-15T19:06:28.860-08:00மதுரைக்காஞ்சி<p> <span style="font-family: Latha, sans-serif; font-size: 10pt;">அன்பிற்குரிய நண்பர்களுக்கு,</span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%;">வணக்கம்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-family: "Latha",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%;">தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்
நெடுஞ்செழியன் என்ற பாண்டிய மன்னன் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் சோழனையும், சேரனையும்,
ஐந்து குறுநில மன்னர்களையும் வென்று, தமிழகம் முழுவதையும் ஆண்டதாக வரலாறு கூறுகிறது.
அவனுடைய அவைக்களப் புலவராக இருந்த மாங்குடி மருதனார் என்பவர் அவனுடைய குடிச்சிறப்பு,
விரம், வெற்றிகள், படைவலிமை, ஆட்சித்திறன், சான்றாண்மை, பாண்டிய நாட்டின் வளம், மதுரை
நகரத்தின் சிறப்பு, மதுரையில் இரவும் பகலும் நடைபெறும் நிகழ்ச்சிகள், வாழ்க்கை நிலையாமை
ஆகியவற்றை, 782 அடிகளைக்கொண்ட மதுரைக்காஞ்சி
என்ற பாடலில் மிக விரிவாகவும் விளக்கமாகவும் ஒரு சிறந்த சொல்லோவியமாகத் தீட்டுகிறார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-family: "Latha",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%;">இப்பாடல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்
இயற்றப்பட்டதால், அதில் உள்ள நூற்றுக்கணக்கான சொற்கள் இக்காலத்தில் வழக்கில் இல்லை.
ஆகவே, மதுரைக்காஞ்சி தற்காலத் தமிழர்களுக்கு எளிதில் படித்துப் புரிந்துகொள்ள முடியாத
புதிராக உள்ளது. அது படிப்பதற்குக் கடினமாக இருப்பாதால் பள்ளி அல்லது கல்லூரிப் பாடங்களில்
அதைச் சேர்ப்பதில்லை. இந்தப் பாடலுக்கு நச்சினார்க்கினியர், உ.வே. சாமிநாத ஐயர், பெருமழைப்புலவர்
பொ.வே. சோமசுந்தரனார் ஆகியோர் சிறப்பான உரைகள்
எழுதியிருக்கிறார்கள். அந்த உறைகளும் எளிதாக
இல்லை. மதுரைக்காஞ்சியைப் படித்து, என்னால் இயன்றவரை அதை எளிமைப்படுத்தி நான் ஒரு உரை
எழுதி என்னுடைய வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறேன்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><a href="https://maduraikanji2023.blogspot.com/"><span style="font-family: "Latha",sans-serif; font-size: 12.0pt; line-height: 107%;">https://maduraikanji2023.blogspot.com</span></a><span style="font-family: "Latha",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%;"> என்ற வலைத்தளத்தில் என் உரை உள்ளது. அதில், 1)மதுரைக்காஞ்சி
– அறிமுகம், 2)மதுரைக்காஞ்சி - மூலம், 3)மதுரைக்காஞ்சி- மூலமும் உரையும் மற்றும் 4)மதுரைக்காஞ்சி
– பொருட்சுருக்கம் ஆகிய நான்கு பகுதிகள் உள்ளன. உங்களுக்கு ஆர்வமும் நேரமும் இருந்தால்
அந்த நான்கையும் படியுங்கள்; உங்கள் நண்பர்களுக்குப் பகிருங்கள். கருத்துகளைக் கூறுங்கள்.
எல்லாவற்றையும் படிக்க நேரமில்லாதவர்கள், அறிமுகம் மற்றும் பொருட்சுருக்கம் ஆகிய இரண்டு
கட்டுரைகளைப் படியுங்கள். உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-family: "Latha",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%;">நன்றி.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-family: "Latha",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%;">அன்புடன்,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-family: "Latha",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%;">பிரபாகரன்<o:p></o:p></span></p>முனைவர். பிரபாகரன்http://www.blogger.com/profile/08741873196318750290noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-178213659587445582.post-71634239336530618792023-02-01T18:34:00.002-08:002023-02-01T18:34:24.022-08:00Letter to Readers<p> <span style="font-family: Vijaya, serif; font-size: 12pt;"> </span><span style="font-family: Vijaya, serif; font-size: 12pt;">Dear Readers,</span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Vijaya",serif; font-size: 12.0pt; line-height: 107%;">Vanakkam.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="margin-bottom: 0in; margin-bottom: 0in; margin-top: 0in; mso-add-space: auto; mso-margin-bottom-alt: 8.0pt; mso-margin-top-alt: 0in; text-align: justify;"><span style="font-family: "Vijaya",serif; font-size: 12.0pt; line-height: 107%;"> Many of you have been
regularly reading my blogs. Some of you have posted your comments, and some of
you have been in communication with me. I want to thank all of you for reading
my blogs over the past many years. I am happy to inform you that the blogs are
being viewed regularly by readers in India, the USA, the UK, Australia, Sri
Lanka, Russia, France, Canada, Saudi Arabia, and a few other countries worldwide.
As of February 1, 2023, The blogs on </span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 12.0pt; line-height: 107%;">புறநானூறு</span><span style="font-family: "Vijaya",serif; font-size: 12.0pt; line-height: 107%;"> have been
viewed (and probably read) more than half a million (500,000) times. I
appreciate your interest in </span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 12.0pt; line-height: 107%;">புறநானூறு</span><span style="font-family: "Vijaya",serif; font-size: 12.0pt; line-height: 107%;"> and my blogs. If you have any questions or
comments, please feel free to contact me at <a href="mailto:prabu0111@gmail.com">prabu0111@gmail.com</a>.
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="margin-bottom: 0in; margin-bottom: 0in; margin-top: 0in; mso-add-space: auto; mso-margin-bottom-alt: 8.0pt; mso-margin-top-alt: 0in; text-align: justify;"><span style="font-family: "Vijaya",serif; font-size: 12.0pt; line-height: 107%;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom: 0in; margin-bottom: 0in; margin-top: 0in; mso-add-space: auto; mso-margin-bottom-alt: 8.0pt; mso-margin-top-alt: 0in;"><span style="font-family: "Vijaya",serif; font-size: 12.0pt; line-height: 107%;">anbudan,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="margin-bottom: 0in; margin-bottom: 0in; margin-top: 0in; mso-add-space: auto; mso-margin-bottom-alt: 8.0pt; mso-margin-top-alt: 0in;"><span style="font-family: "Vijaya",serif; font-size: 12.0pt; line-height: 107%;">Prabhakaran<o:p></o:p></span></p>முனைவர். பிரபாகரன்http://www.blogger.com/profile/08741873196318750290noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-178213659587445582.post-48065475008161696092011-04-07T09:51:00.000-07:002011-04-07T09:55:21.763-07:0069. பொற்றாமரை பெறுவாய்!<strong>பாடியவர்:</strong> ஆலத்தூர் கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 34- இல் காண்க.<br /><strong>பாடப்பட்டோன்:</strong> சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 34- இல் காண்க.<br /><strong>பாடலின் பின்னணி:</strong> ஒருகால், ஆலத்தூர் கிழார் கிள்ளி வளவனைக் காணச் சென்றார். அவனுடைய படைச் சிறப்பும், கொடைச் சிறப்பும் அவரை மிகவும் கவர்ந்தன. அவனுடைய சிறப்பியல்புகளை எடுத்துக் கூறி, ஒரு பாணனை கிள்ளி வளவனிடம் ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.<br /><br /><strong>திணை:</strong> பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.<br /><strong>துறை:</strong> பாணாற்றுப்படை. பரிசு பெற்ற பாணன் பரிசு பெற வரும் பாணனைப் புரவலரிடம் ஆற்றுப்படுத்துவது.<br /><br /><br /> கையது கடன்நிறை யாழே; மெய்யது<br /> புரவலர் இன்மையின் பசியே; அரையது<br /> வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர்<br /> ஓம்பி உடுத்த உயவற் பாண!<br />5 பூட்கை இல்லோன் யாக்கை போலப்<br /> பெரும்புல் என்ற இரும்பேர் ஒக்கலை;<br /> வையகம் முழுதுடன் வளைஇப், பையென<br /> என்னை வினவுதி ஆயின், மன்னர் <br /> அடுகளிறு உயவும் கொடிகொள் பாசறைக்<br />10 குருதிப் பரப்பின் கோட்டுமா தொலைச்சிப்<br /> புலாக்களம் செய்த கலாஅத் தானையன்<br /> பிறங்குநிலை மாடத்து உறந்தை யோனே!<br /> பொருநர்க்கு ஓக்கிய வேலன் ஒருநிலைப்<br /> பகைப்புலம் படர்தலும் உரியன் தகைத்தார்<br />15 ஒள்ளெரி விரையும் உருகெழு பசும்பூண்<br /> கிள்ளி வளவற் படர்குவை ஆயின்<br /> நெடுங்கடை நிற்றலும் இலையே; கடும்பகல்<br /> தேர்வீசு இருக்கை ஆர நோக்கி<br /> நீஅவற் கண்ட பின்றைப் பூவின் <br />20 ஆடும்வண்டு இமிராத் தாமரை<br /> சூடாய் ஆதல் அதனினும் இலையே.<br /><br /><strong>அருஞ்சொற்பொருள்:</strong> <br />1. கடன் = முறை. 2. அரை = இடுப்பு. 3. வேர் = வேர்வை; சிதாஅர் = சிதார் = கந்தை. 4. ஓம்பி = பாதுகாத்து; உயவல் = வருத்தம். 5. பூட்கை = எழுச்சி, கொள்கை. 6 புல் = அற்பம், இழிவு (பொலிவற்ற); ஒக்கல் = சுற்றம். 7. பையென = மெல்ல. 10. கோட்டுமா = யானை; தொலைச்சி = கொன்று. 11. கலாம் = போர். 12. பிறங்கல் = உயற்சி. 14 படர்தல் = செல்லுதல்; தகை = பெருமை, மேம்பாடு. 15. உரு = நிறம்; புரை = ஒப்பு; பூண் = அணிகலன். 18. வீசுதல் = வரையாது கொடுத்தல். 20. இமிர்தல் = மொய்த்தல்.<br /><br /><strong>கொண்டு கூட்டு:</strong> பாண, ஒக்கலையாய், வளைஇ, வினவுதியாயின், தானையை உடையவன், உறந்தையோன், அவன்பாற் படர்குவையாயின், நின் கையது யாழாதலானும், மெய்யது பசியாதனாலும் நெடுங்கடை நிற்றலுமில்லை; நீ அவற்கண்ட பின்றைத் தாமரை சூடாயாதல் அதனினும் இல்லை எனக் கூட்டுக.<br /><br /><strong>உரை:</strong> உன் கையில் இருப்பது முறைப்படி செய்த யாழ். உன் உடல், உதவுவோர் இல்லாமையால் பசியால் வாடுகிறது. உன் இடுப்பில் இருப்பது, வியர்வையால் நனைந்த, கிழிந்த கந்தைத் துணி. அந்தத் துணியில் உள்ள கிழிசல்கள் வேறுவேறு நிறமுடைய நூல்களால் தைக்கப்பட்டிருக்கின்றன. நீ அதைப் பாதுகாத்து உடுத்திக் கொண்டிருக்கிறாய். வருத்தத்தில் உள்ள பாண, நீ எழுச்சி இல்லாதவனின் உடல்போலப் பொலிவற்ற பெரிய சுற்றத்தாரை உடையவன். இந்த நிலையில், நீ உலகம் முழுவதும் சுற்றி வந்து, “ என் வறுமையைத் தீர்ப்பவர் யார்?” என்று என்னிடம் மெல்லக் கேட்கின்றாயாயின், நான் கூறுவதைக் கேள்.<br /> <br />கிள்ளிவளவனின் கொடி பறக்கும் பாசறையில், பகை வேந்தர்களது யானைகள் புண்பட்டு வருந்தும். அவன், குருதிப் பரப்பில் யானைகளைக் கொன்று புலால் நாறும் போர்க்களத்தை ஏற்படுத்திய படையை உடையவன்; உயர்ந்த மாடங்களை உடைய உறையூரில் உள்ளான்; போரிடுவோரைத் தாக்குவதற்காக வேல் எடுத்தவன்; சில சமயங்களில் பகைவர் நாடுகளுக்கும் சென்று போர் புரிபவன்; பெருமைக்குரிய மாலையை உடையவன்; ஓலியுடன் கூடிய தீயைப் போன்ற நிறம் பொருந்திய பசும்பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்தவன். அத்தகைய கிள்ளி வளவனிடம் சென்றாயானல், அவனுடைய நெடிய வாயிலில் நீ நெடுநேரம் காத்திருக்க மாட்டாய்; நண்பகல் நேரத்தில், அவன் பரிசிலர்க்குத் தேர்களை வழங்குவதை உன் கண்ணாரக் காண்பாய். நீ அவனைக் கண்ட பின்பு, பூக்களில் புகுந்து ஆடும் வண்டுகள் மொய்க்காத பொற்றாமரைப் பூவைச் சூடாது இருப்பது அதனினும் இல்லை. அதனால் அங்கு செல்வாயாக.முனைவர். பிரபாகரன்http://www.blogger.com/profile/08741873196318750290noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-178213659587445582.post-73358559327065743942011-04-07T09:48:00.000-07:002011-04-07T09:51:37.167-07:0068. பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே!<strong>பாடியவர்:</strong> கோவூர் கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 31- இல் காண்க.<br /><strong>பாடப்பட்டோன்:</strong> சோழன் நலங்கிள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 27- இல் காண்க.<br /><strong>பாடலின் பின்னணி:</strong> சோழன் நலங்கிள்ளி உறையூரிலிருந்து ஆட்சி செய்த பொழுது, கோவூர் கிழார் அவனைக் காணச் சென்றார். அவன் உயர்ந்த அணிகலன்களை அணிந்து, மகளிரிடம் இனிமையாகப் பழகுவதையும், வீரர்கள் அவனைப் பணிந்து வாழ்வதையும், தன் நாட்டு மக்களை அவன் அன்போடு பாதுகாப்பதையும், அவனுடைய வீரர்கள் போர்மீது மிகுந்த விருப்பமுடையவர்களாக இருப்பதையும் அவர் நேரில் கண்டார். தான் கண்ட காட்சிகளைக், கோவூர் கிழார், பாணன் ஒருவனிடம் கூறுவதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது. <br /><br /><strong>திணை:</strong> பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.<br /><strong>துறை:</strong> பாணாற்றுப்படை. பரிசு பெற்ற பாணன் பரிசு பெற வரும் பாணனைப் புரவலரிடம் ஆற்றுப்படுத்துவது.<br /><br /><br /> உடும்புஉரித்து அன்ன என்புஎழு மருங்கின்<br /> கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது<br /> சில்செவித்து ஆகிய கேள்வி நொந்துநொந்து<br /> ஈங்குஎவன் செய்தியோ? பாண! பூண்சுமந்து<br />5 அம்பகட்டு எழிலிய செம்பொறி ஆகத்து<br /> மென்மையின் மகளிர்க்கு வணங்கி வன்மையின் <br /> ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை<br /> புனிறுதீர் குழவிக்கு இலிற்றுமுலை போலச்<br /> சுரந்த காவிரி மரங்கொல் மலிநீர்<br />10 மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன்<br /> உட்பகை ஒருதிறம் பட்டெனப் புட்பகைக்கு<br /> ஏவான் ஆகலின் சாவேம் யாம்என<br /> நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்<br /> தணிபறை அறையும் அணிகொள் தேர்வழிக்<br />15 கடுங்கண் பருகுநர் நடுங்குகை உகுத்த<br /> நறுஞ்சேறு ஆடிய வறுந்தலை யானை<br /> நெடுநகர் வரைப்பின் படுமுழா ஓர்க்கும்<br /> உறந்தை யோனே குருசில்<br /> பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே.<br /><br /><strong>அருஞ்சொற்பொருள்:</strong> <br />1. என்பு = எலும்பு; மருங்கு = பக்கம் (விலா). 2 கடும்பு = சுற்றம். 3. சில் = சில. 4. பூண் = அணிகலன். 5 அம் = அழகிய; பகடு = பெரிய, பெருமை; எழில் = அழகு, இளமை; பொறி = புள்ளி. ஆகம் = மார்பு. 7. பிணித்தல் = கட்டுதல், சிறைப்படுத்தல்; பீடு = பெருமை. 8. புனிறு = ஈன்ற அணிமை; இலிற்றுதல் = சுரத்தல். 9. மலிதல் = மிகுதல். 10 மன்பதை = மக்கட் கூட்டம்; புரத்தல் = காத்தல். 11. திறம் = பகுதி. 14. தணிபறை = தணிவதற்குக் காரணமாகிய பறை. 15 கடுங்கள் = முதிர்ந்த கள்; உகுத்தல் = சிதறுதல்.16. வறுமை = வெறுமை; வறுந்தலை = பாகர் ஏறாத வெறுந்தலை. 17. வரைப்பு = எல்லை; ஓர்த்தல் = கேட்டல். 18. குருசில் = குரிசில் = அரசன்.<br /><br /><strong>கொண்டு கூட்டு:</strong> பாண, நீ செலின், நெடுந்தகை, பொருநன் குருசில், உறந்தையோன், அவன் பிறன் கடை மறப்ப நல்குவன்; நீ ஈங்கு எவன் செய்தியோ எனக் கூட்டுக.<br /><br /><strong>உரை:</strong>பாண! உடும்பை உரித்ததுபோல் எலும்புகள் எழும்பிய விலாப் பக்கங்களை உடைய சுற்றத்தின் மிகுந்த பசியைத் தீர்ப்பாரைக் காணாமல், உன் பாடல்களைக் கேட்பவர்கள் சிலரே என்று நொந்துகொண்டு இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறாய்? அணிகலன்களை அணிந்த, அழகிய, பெரிய, மார்பில் சிவந்த புள்ளிகளை (தேமல்) உடையவன் நலங்கிள்ளி. அவன் மென்மையான மகளிரிடம் பணிவாகவும், வலிமை மிகுந்த பகைவர்களைச் சிறைப்படுத்தும் பெருமையும் பொருந்தியவன். அவன், குழந்தை பிறந்தவுடன் பால் சுரக்கும் முலைபோல், நீர்ப் பெருகிய காவிரி, வெள்ளப் பெருக்கெடுத்து கரையிலுள்ள மரங்களை அழிக்கும் சோழ நாட்டுக்குத் தலைவன். தன்னுடைய படையில் ஒரு பகுதியில் உட்பகை தோன்றினால், பறவைகளால் நிகழும் தீய நிமித்தங்கள் நடைபெறும் பொழுது, அப்படையைப் போருக்குச் செலுத்துவதை நிறுத்திவிடுவான். போருக்குச் செல்ல இயலாதலால், அந்தப் படைவீரர்கள், “ செத்து விடுவோம்” என்று கூறித் தங்கள் பருத்த தோளைத் தட்டுவர். அவர்கள் ஆத்திரம் தணிவதற்குத் தேரோடும் தெருக்களில், தாழ்ந்த ஒலியில் பறையை முழக்குவர். அவர்களில் சிலர், நன்கு முதிர்ந்த கள்ளைப் பருகியதால் நடுங்கும் கைகளால் அக்கள்ளைச் சிந்துவர். கள் சிந்தியதால், சேறாகிய தெருக்களில் பாகர்கள் இல்லாமல் திரியும் யானைகள் பெரிய நகரில் ஒலிக்கும் முரசொலியைக் காது கொடுத்துக் கேட்கும். அத்தகைய உறையூரில், சோழன் நலங்கிள்ளி உள்ளான். நீ அவனிடம் சென்றால், அதற்குப் பிறகு வேறு யாரிடத்தும் செல்வதை மறக்கும் அளவுக்கு பரிசளிப்பான்.முனைவர். பிரபாகரன்http://www.blogger.com/profile/08741873196318750290noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-178213659587445582.post-71449385171652247242011-04-07T09:44:00.000-07:002011-04-07T09:48:35.116-07:0067. அன்னச் சேவலே! <strong>பாடியவர்:</strong> பிசிராந்தையார் (67, 184, 191, 212). பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த ஓரூர். ஆந்தையார் என்பது இப்புலவரின் இயற்பெயர். இவர் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் பாண்டியன் அறிவுடை நம்பி. இப்புலவர், சோழ மன்னன் கோப்பெருஞ்சோழனிடம் மிகுந்த அன்புடையவர். மிகுந்த அன்புடையவராக இருந்தாலும் இவரும் கோப்பெருஞ்சோழனும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்ததில்லை. சந்திக்காமலேயே அவர்கள் நட்பு வளர்ந்து கொண்டிருந்தது, “ புணர்ச்சிப் பழகுதல் வேண்டா; உணர்ச்சிதாம் நட்பாம் கிழமை தரும் (குறள் - 785).” என்ற வள்ளுவரின் குறளுக்கு எடுத்துக் காட்டாக இவர்களுடைய நட்பு இருந்தது. தன் புதல்வர்களுடன் ஏற்பட்ட பகையின் காரணத்தால் மனம் வருந்திக் கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்து உயிர் நீத்தான். அதைக் கேட்ட பிசிராந்தையார் சோழ நாட்டிற்குச் சென்று கோப்பெருஞ்சோழன் இறந்தவிடத்திலேயே தானும் வடக்கிருந்து உயிர் நீத்தார்.<br /><br />இவர் புறநானூற்றில் நான்கு பாடல்களையும், அகநானூற்றில் 308-ஆம் செய்யுளையும், நற்றிணையில் 91-ஆம் செய்யுளையும் இயற்றியவர். இவர் செய்யுட்கள் சிறந்த கருத்தாழமும் இலக்கிய நயமும் உடையவை.<br /><strong>பாடப்பட்டோன்:</strong> கோப்பெருஞ் சோழன் (67, 212, 213, 219, 221, 222, 223).<br /> கரிகாலனுக்குப் பிறகு சோழநாட்டை ஆண்ட மன்னர்களில் கிள்ளிவளவன் என்பவனும் ஒருவன் என்று வரலாறு கூறுகிறது. ஆனால், கிள்ளிவளவனுக்கும் கரிகாலனுக்கும் இருந்த உறவுமுறை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. சில வரலாற்று ஆசிரியர்கள், கரிகால் வளவனுக்குப் பிறகு, அவன் மகன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்பவன் சோழ நாட்டின் ஒரு பகுதிய ஆண்டதாகவும், அவனுடைய மூன்று மகன்களுள் ஒருவன் கிள்ளிவளவன் என்றும் கூறுகின்றனர். கிள்ளி வளவனுக்குப் பிறகு சோழநாட்டை ஆண்ட மன்னர்களில் ஒருவன் கோப்பெருஞ் சோழன். கிள்லிவளவனுக்கும் கோப்பெருஞ்சோழனுக்கும் இருந்த உறவுமுறை தெரியவில்லை. கோப்பெருஞ்சோழன் சிறந்த தமிழ்ப் புலமை உடையவனாக இருந்தான் என்பது இவன் புறநானூற்றில் இயற்றிய மூன்று பாடல்களிலிருந்தும் (214, 215, 216), குறுந்தொகையில் இவன் இயற்றிய நான்கு பாடல்களிலிருந்தும் (20, 53, 129, 147) தெரியவருகிறது. இவனுக்கும் இவனுடைய இருமகன்களுக்கும் இடையே பகை மூண்டது. பகையின் காரணத்தால், தன் மக்களை எதிர்த்துப் போருக்குப் புறப்பட்டான். புல்லாற்றூர் எயிற்றியனார் முதலிய புலவர் பெருமக்கள் கூறிய அறிவுரைக்கேற்ப கோப்பெருஞ்சோழன் போர் செய்யும் எண்ணத்தைக் கைவிட்டான். தன் மக்களுடன் தோன்றிய பகையால் வருத்தமடைந்த கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் நீத்தான்.<br /><strong>பாடலின் பின்னணி:</strong> புலவர் பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழனக்கும் தனக்கும் உள்ள நட்பையும், அவனுடைய வீரம், நாட்டைக் காக்கௌம் பண்பு, அன்பு போன்ற நற்குணங்களையும் வடதிசை நோக்கிச் செல்லும் ஒரு சேவலிடம் கூறுவதுபோல் அமைந்துள்ளது. மற்றும், அச்சேவல், உறையூருக்குச் சென்று கோப்பேருஞ்சோழனைக் கண்டு ”நான் பிசிராந்தையின் அடியேன்” என்று சொன்னால் கோப்பெருஞ்சோழன் சேவலின் பெட்டை அணிவதற்கு நல்ல அணிகலன்களைத் தருவான் என்றும் இப்படலில் கூறுகிறார்<br /><br /><strong>திணை:</strong> பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.<br /><strong>துறை:</strong> இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும். <br /><br /> அன்னச் சேவல்! அன்னச் சேவல்!<br /> ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்<br /> நாடுதலை அளிக்கும் ஒண்முகம் போலக்<br /> கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும் <br />5 மையல் மாலையாம் கையறுபு இனையக்<br /> குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி<br /> வடமலைப் பெயர்குவை ஆயின் இடையது<br /> சோழ நன்னாட்டுப் படினே கோழி<br /> உயர்நிலை மாடத்துக், குறும்பறை அசைஇ<br />10 வாயில் விடாது கோயில் புக்கு எம்<br /> பெருங்கோக் கிள்ளி கேட்க இரும்பிசிர்<br /> ஆந்தை அடியுறை எனினே, மாண்ட நின்<br /> இன்புறு பேடை அணியத்தன்<br /> நன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே.<br /><br /><strong>அருஞ்சொற்பொருள்:</strong> <br />2. ஆடு = கொல்லுதல், வெற்றி; அடுபோர் = வெல்லும் போர். 3. தலையளித்தல் = காத்தல், கருணையோடு நோக்குதல்; ஓள் = ஒளி. 4. கோடு = பக்கம்; முகிழ் = குவியும். 5. மையல் = மயக்கம்; கையறுதல் = செயலற்றிருத்தல்; இனைதல் = வருந்தல். 6. மாந்துதல் = உண்ணுதல். 8. கோழி = உறையூர். 9. குறும்பறை = பேடை (பெண் பறவை); அசைதல் = தங்குதல். 10. விடுதல் = நிறுத்துதல். 11. கிள்ளி = சோழன் (சோழ மன்னர்களின் சிறப்புப் பெயர்); இரு = பெரிய. 12. அடியுறை = அடியேன். 13. பேடை = பெட்டை.<br /><br /><strong>உரை:</strong> அன்னச் சேவலே! அன்னச் சேவலே! கொல்லும் போரில் வெற்றி பெற்று, நாட்டை அருள் செய்து காக்கும் மன்னனின் ஒளிதிகழும் முகம் போல், இரண்டு பக்கங்களும் ஒன்று கூடி, முழுமதி ஒளியுடன் விளங்கி மயக்கம் தரும் மாலைப் பொழுதில், நான் செயலற்று வருந்துகிறேன். நீ குமரி ஆற்றின் பெரிய துறையில் அயிரை மீன்களை உண்டு, வடதிசையில் உள்ள இமயத்தை நோக்கிச் சென்றாயாயின், இடையே சோழ நாடு உள்ளது. அங்கே, உறையூரில் உள்ள உயர்ந்த மாடத்தில் உனது பெட்டையோடு தங்கி, வாயில் காவலரைக் கடந்து, அரண்மனைக்குள் புகுந்து, கோப்பெருஞ்சோழனின் காதுகளில் கேட்குமாறு, “ நான் பெருமைக்குரிய பிசிராந்தையாரின் அடியேன்” என்று சொன்னால், பெருமைக்குரிய உன் இனிய பெட்டை அணிவதற்குத் தன்னுடைய நல்ல அணிகலன்களைக் கோப்பெருஞ்சோழன் தருவான்.முனைவர். பிரபாகரன்http://www.blogger.com/profile/08741873196318750290noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-178213659587445582.post-66395548820003119112011-04-07T09:34:00.000-07:002020-05-17T05:26:02.475-07:0066. நின்னினும் நல்லன் அல்லனோ! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<strong>பாடியவர்:</strong> வெண்ணிக் குயத்தியார்(66). வெண்ணி என்பது திருவாரூர் மாவட்டத்தில், நீடாமங்கலம் என்னும் ஊருக்கு அருகே உள்ள ஓரூர். இவ்வூர் வெண்ணில் என்று இக்காலத்தில் வழங்கப்படுகிறது. சங்க காலத்தில் மண்பாண்டங்கள் செய்தவர்கள் வேட்கோவர் என்று அழைக்கப்பட்டனர். அவர்களில் சிறந்தவர்களுக்கு “குயம்” என்ற பட்டம் அரசர்களால் வழங்கப்பட்டது என்றும் இப்பழக்கம் பத்தாம் நூற்றண்டு வரை இருந்ததாகவும் அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார். ஆகவே, இப்புலவர் குயக்குலத்தைச் சார்ந்த பெண் என்பது இவருடைய பெயரிலிருந்து தெரியவருகிறது. <br />
<strong>பாடப்பட்டோன்:</strong> சோழன் கரிகாற் பெருவளத்தான். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 7- இல் காண்க.<br />
<strong>பாடலின் பின்னணி:</strong> கரிகால் வளவன், வெண்ணி என்ற ஊரில் நடைபெற்ற போரில் சேரமான் பெருஞ்சேரலாதனையும், பாண்டிய மன்னன் ஒருவனையும், வேளிர்குலத்தைச் சார்ந்த பதினொரு சிற்றரசர்களையும் வென்றான். அப்போரில் சேரமான் பெருஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்த வேல் அவன் மார்பைத் துளைத்து முதுகையும் புண்ணாக்கியது. தன் முதுகில் புண்பட்டதால் அவன் நாணமுற்று வடக்கிருந்து உயிர் துறந்தான். அதைக் கேள்வியுற்ற வெண்ணிக் குயத்தியார், இப்பாடலில், சேரமான் பெருஞ்சேரலாதனின் செயலை வியந்து, கரிகாலனை நோக்கி, “வேந்தே, போரில் வெற்றி பெற்றதால் நீ வெற்றிக்குரிய புகழ் மட்டுமே அடைந்தாய். ஆனால், சேரமான் பெருஞ்சேரலாதன் உனக்கு வெற்றியை அளித்தது மட்டுமல்லாமல், உன்னால் உண்டாகிய புண்ணுக்கு நாணி, அவன் வடக்கிருந்து பெரும்புகழ் பெற்றான். ஆகவே, அவன் உன்னைவிட நல்லவன் அல்லனா?” என்று கேட்கிறார்.<br />
<br />
<br />
<strong>திணை:</strong> வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும். <br />
<strong>துறை:</strong> அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.<br />
<br />
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி<br />
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!<br />
களிஇயல் யானைக் கரிகால் வளவ!<br />
சென்றுஅமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற<br />
5 வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே<br />
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை<br />
மிகப் புகழ் உலகம் எய்திப்<br />
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே.<br />
<br />
<strong>அருஞ்சொற்பொருள்:</strong> <br />
1. நளி = செறிதல், குளிர்ச்சி; இரு = பெரிய; முந்நீர் = கடல்; நாவாய் = கப்பல். 2. வளி = காற்று; உரவோன் = வலியவன்; மருகன் = வழித்தோன்றல். 3. களி = செருக்குறுதல். 4. அமர் = போர்; கடந்த = அழித்த. 5. அன்றே = அல்லவா; 6. கலி = தழைத்தல்; பறந்தலை = போர்க்களம்.<br />
<br />
<strong>கொண்டு கூட்டு:</strong> உரவோன் மருக, கரிகால் வளவ,வென்றோய்,வெண்ணிப் பறந்தலைப்பட்ட புறப்புண் நாணி, உலகத்துப் புகழ் மிக எய்தி வடக் கிருந்தோன், நின்னினும் நல்லன் அன்றே எனக் கூட்டுக. <br />
<br />
<strong>உரை:</strong> காற்றின் இயல்பை அறிந்து, நீர் நிறைந்த பெரிய கடலில் மரக்கலத்தை ஓட்டிய வலியவர்களின் வழித்தோன்றலே! செருக்குடைய யானைகளையுடைய கரிகால் வளவனே! போருக்குச் சென்று உனது வலிமை தோன்றுமாறு வெற்றி கொண்டவனே! மிகுந்த அளவில் புதிய வருவாய் உள்ள வெண்ணி என்னும் ஊரில் நடைபெற்ற போரில், முதுகில் புண்பட்டதற்கு நாணி, வடக்கிருந்து மிக்க புகழுடன் விண்ணுலகம் எய்திய சேரமான் பெருஞ்சேரலாதன் உன்னைவிட நல்லவன் அல்லனோ?<br />
<br />
<strong>சிறப்புக் குறிப்பு:</strong> காற்றைப் பயன்படுத்திக் கப்பலைச் செலுத்தும் முறையைச் சங்க காலத்திலேயே தமிழர்கள் அறிந்திருந்தார்கள் என்பது இப்பாடலிலிருந்து தெரிய வருகிறது.</div>
முனைவர். பிரபாகரன்http://www.blogger.com/profile/08741873196318750290noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-178213659587445582.post-58282258224350167162011-04-01T13:18:00.000-07:002011-04-01T13:20:47.195-07:0065. நாணமும் பாசமும்!<strong>பாடியவர்:</strong> கழாத்தலையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 62-இல் காண்க.<br /><strong>பாடப்பட்டோன்:</strong> சேரமான் பெருஞ்சேரலாதன். கரிகால் வளவன், வெண்ணி என்ற ஊரில் நடைபெற்ற போரில் சேரமான் பெருஞ்சேரலாதனையும், பாண்டிய மன்னன் ஒருவனையும் பதினொரு வேளிர்குலச் சிற்றரசர்களையும் வென்றான். சேரமான் பெருஞ்சேரலாதனைப் பற்றி வேறு செய்திகள் எதுவும் காணப்படவில்லை. <br /><strong>பாடலின் பின்னணி:</strong> வெண்ணியில் நடைபெற்ற போரில் சேரமான் பெருஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்த வேல் அவன் மார்பைத் துளைத்து முதுகையும் புண்ணாக்கியது. தன் முதுகில் புண்பட்டதால் அவன் நாணமுற்று வடக்கிருந்து உயிர் துறந்தான். அவனுடைய மரணத்தால் பெருந்துயருற்ற கழாத்தலையார், தம் வருத்தத்தை இப்பாடலில் வெளிப்படுத்துகிறார்.<br /><strong><br />திணை:</strong> பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.<br /><strong>துறை:</strong> கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.<br /> <br /> மண்முழா மறப்பப் பண்யாழ் மறப்ப<br /> இருங்கண் குழிசி கவிழ்ந்துஇழுது மறப்பச்<br /> சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப<br /> உழவர் ஓதை மறப்ப விழவும்<br />5 அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப<br /> உவவுத்தலை வந்த பெருநாள் அமையத்து<br /> இருசுடர் தம்முள் நோக்கி ஒருசுடர்<br /> புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்<br /> தன்போல் வேந்தன் முன்புகுறித்து எறிந்த<br />10 புறப்புண் நாணி மறத்தகை மன்னன்<br /> வாள்வடக்கு இருந்தனன் ஈங்கு<br /> நாள்போல் கழியல ஞாயிற்றுப் பகலே!<br /><br /><strong>அருஞ்சொற்பொருள்:</strong> <br />1. மண் = முரசுக்குத் தடவப்படும் கருஞ்சாந்து; முழா = முழவு = முரசு. 2. இரு = பெரிய; கண் = இடம்; குழிசி = பானை; இழுது = வெண்ணெய். 3. சுரும்பு = வண்டு; ஆர்த்தல் = ஒலித்தல்; தேறல் = மது. 4. ஓதை = ஓசை. 5. அகலுள் = தெரு, ஊர், நாடு; சீறூர் = மலை நாட்டுச் சிற்றூர். 6. உவவு = முழுநிலா; அமையம் = சமயம். 8. புன்கண் = பொலிவு இழத்தல். 10. தகை = தகுதி, தன்மை.<br /><br /><strong>உரை:</strong> முரசு முழங்கவில்லை. யாழ் வாசிக்கப்படவில்லை. அகன்ற தயிர்ப்பானை கவிழ்த்து வைக்கப்பட்டு, வெண்ணெய் கடையாமல் உள்ளது. வண்டுகள் மொய்க்கும் மதுவை சுற்றத்தார் அருந்தவில்லை. உழவர் உழவுத் தொழிலைச் செய்யவில்லை. சிறிய ஊர்களின் தெருக்களில் விழாக்கள் நடைபெறவில்லை. முழுமதி தோன்றும் பெருநாளில், ஞாயிறும் திங்களும் ஆகிய இரண்டு சுடர்களும் ஒன்றையொன்று எதிர்நின்று பார்த்து, அவற்றுள் ஒருசுடர் ஒளி குறைந்து மாலைப்பொழுதில் மலையில் மறைந்தது போல், தன்னைப் போன்ற ஒருவேந்தன், மார்பைக் குறிவைத்து எறிந்த வேலால் முதுகில் உண்டாகிய புண்ணால் நாணமுற்று, வீரப்பண்புடைய சேரன் தன் வாளோடு வடக்கிருந்தான். அதனால், இங்கே. முன்பு இருந்ததுபோல் பகல் பொழுதுகள் கழிய மட்டா.<br /><br /><strong>சிறப்புக் குறிப்பு:</strong> ”மண்முழா மறப்ப”, ”பண்யாழ் மறப்ப”, ”குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப” ”சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப”,” உழவர் ஓதை மறப்ப”, ”சீறூர் அகலுள் ஆங்கண் விழவும் மறப்ப” என்பவை முறையே, ”முரசு முழங்கவில்லை”, “ யாழ் வாசிக்கப்படவில்லை”, ”தயிர்ப்பானை கவிழ்த்து வைக்கப்பட்டு, வெண்ணெய் கடையாமல் உள்ளது”, ”வண்டுகள் மொய்க்கும் மதுவை சுற்றத்தார் அருந்தவில்லை”, ”உழவர் உழவுத் தொழிலைச் செய்யவில்லை”, ”சிறிய ஊர்களின் தெருக்களில் விழாக்கள் நடைபெறவில்லை” என்பவற்றைக் குறிக்கின்றன.முனைவர். பிரபாகரன்http://www.blogger.com/profile/08741873196318750290noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-178213659587445582.post-24300142983206249052011-04-01T13:14:00.000-07:002018-01-03T18:01:13.545-08:0064. புற்கை நீத்து வரலாம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<strong>பாடியவர்:</strong> நெடும்பல்லியத்தனார்(64). புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றுதான். பல்லியம் என்று சொல்லுக்கு பலவகையான இசைக்கருவிகள் என்று பொருள். இவர் பல வகையான இசைக்கருவிகளை இயக்குவதில் வல்லவராக இருந்ததால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.<br />
<strong>பாடப்பட்டோன்:</strong> பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 6-இல் காண்க. <br />
<strong>பாடலின் பின்னணி:</strong> இப்பாடலில், வறுமையில் வாடும் விறலி ஒருத்தியைப், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியிடம் சென்றால் அவள் வறுமை தீரும் என்று சொல்லி, அவளைப் புலவர் நெடும்பல்லியத்தனார் பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியிடம் ஆற்றுப்படுத்துகிறார்.<br />
<br />
<strong>திணை:</strong> பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.<br />
<strong>துறை:</strong> விறலியாற்றுப்படை. அரசன் புகழ்பாடும் விறலியை வழிப்படுத்துதல்.<br />
<br />
நல்யாழ் ஆகுளி பதலையடு சுருக்கிச்<br />
செல்லா மோதில் சில்வளை விறலி!<br />
களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை<br />
விசும்புஆடு எருவை பசுந்தடி தடுப்பப்<br />
5 பகைப்புலம் மரீஇய தகைப்பெருஞ் சிறப்பின்<br />
குடுமிக் கோமாற் கண்டு<br />
நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே?<br />
<br />
<strong>அருஞ்சொற்பொருள்:</strong> <br />
1. ஆகுளி = சிறுபறை; பதலை = மாக்கிணைப்பறை; சுருக்குதல் = கட்டுதல். 2. தில் - விருப்பத்தை உணர்த்தும் அசைச்சொல். 3. கணம் = கூட்டம்; அகன் = அகன்ற; பறந்தலை = போர்க்களம்; கண் = இடம். 4. எருவை = பருந்து; தடி = ஊன். 5 மரீஇய = பொருந்திய. 6. கோமான் = அரசன். 7. புற்கை = கஞ்சி, கூழ்; நீத்தல் = விட்டுவிடுதல்.<br />
<br />
<br />
<strong>கொண்டு கூட்டு:</strong> சில்வளை விறலி, குடுமிக் கோமாற் கண்டு வரற்கே, செல்லாமோ எனக் கூட்டுக.<br />
<br />
<strong>உரை:</strong> சில வளையல்களை மட்டுமே அணிந்த விறலியே! யானைக் கூட்டங்கள் போரிட்ட அகன்ற இடங்கள் உள்ள போர்க்களத்தில், ஆகாயத்தில் பறக்கும் பருந்துகளைப் பசுமையான ஊன் துண்டங்கள் தடுக்கும் பகைவர் நாட்டில் பொருந்திய முதுகுடுமிப் பெருவழுதியைக் கண்டு, கஞ்சி குடிக்கும் வறுமையான வாழ்க்கையிலிருந்து விடுதலை பெறுவதற்கு, நல்ல யாழையும், சிறுபறையையும், ஒருதலை மாக்கிணையும் எடுத்துக் கட்டிக்கொண்டு செல்லுவோமா?</div>
முனைவர். பிரபாகரன்http://www.blogger.com/profile/08741873196318750290noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-178213659587445582.post-91183036136822560262011-04-01T13:11:00.000-07:002011-04-01T13:14:24.739-07:0063. என்னாவது கொல்?<strong>பாடியவர்:</strong> பரணர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 4-இல் காண்க.<br /><strong>பாடப்பட்டோர்:</strong> சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி; சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன். இவர்களைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 62-இல் காண்க.<br /><strong>பாடலின் பின்னணி:</strong> சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியும் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் போரில் ஒருங்கே இறந்ததைக் கண்டு வருந்திய பரணர், “யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை மற்றும் தேர்ப்படை எல்லாம் அழிந்தன. இரு மன்னர்களும் இறந்தனர். இனி இந்நாடுகள் என்ன ஆகுமோ?” என்று இப்பாடலில் தம் வருத்தத்தை வெளிபடுத்துகிறார். <br /><br /><strong>திணை:</strong> தும்பை. பகைவரோடு போர் செய்வதற்கு ஆயத்தமாகும் பொழுது தும்பைப் பூவைச் சூடிக் கொள்ளல்.<br /><strong>துறை :</strong> தொகை நிலை. போர்க்களத்தில் அனைவரும் ஒருங்கே மாய்ந்ததைக் கூறுதல்.<br /><br /> எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி<br /> விளைக்கும் வினையின்றிப் படைஒழிந் தனவே;<br /> விறற்புகழ் மாண்ட புரவி எல்லாம்<br /> மறத்தகை மைந்தரொடு ஆண்டுப்பட் டனவே;<br />5 தேர்தர வந்த சான்றோர் எல்லாம்<br /> தோல்கண் மறைப்ப ஒருங்குமாய்ந் தனரே;<br /> விசித்துவினை மாண்ட மயிர்க்கண் முரசம்<br /> பொறுக்குநர் இன்மையின் இருந்துவிளிந் தனவே;<br /> சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென<br />10 வேந்தரும் பொருதுகளத்து ஒழிந்தனர்; இனியே<br /> என்னா வதுகொல் தானே; கழனி<br /> ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்<br /> பாசவல் முக்கித் தண்புனல் பாயும்<br /> யாணர் அறாஅ வைப்பின்<br />15 காமர் கிடக்கைஅவர் அகன்றலை நாடே?<br /><br /><strong>அருஞ்சொற்பொருள்:</strong> <br />1. எனை = எவ்வளவு; பல் = பல; துளங்கல் = கலங்கல். 2. விளைதல் = உண்டாதல். 3. விறல் = வெற்றி; மாண்ட = பெருமைக்குரிய; புரவி = குதிரை. 4. மறம் = வலிமை; தகை = தகுதி, தன்மை. 5. சான்றோர் = வீரர். 6. தோல் = கேடயம். 7. விசித்தல் = இறுகக் கட்டுதல். 8 பொறுக்கல் = தாங்குதல்; விளிதல் = அழிதல், கெடுதல். 11. கழனி = வயல். 12. வள்ளி = கொடி; தொடி = கைவளை. 13. பாசவல் = பாசு + அவல்; பாசு = பசுமை(நல்ல); முக்கி = உண்டு. 14. யானர் = புதிய வருவாய்; அறா = குறயாத; அறல் = இல்லாமற் போதல்; அறா என்பது அறல் என்பதின் எதிர்மறை; வைப்பு = நிலப்பகுதி (ஊர்). 15. காமர் = அழகு; கிடக்கை = குடியிருப்பு.<br /><br /><strong>உரை:</strong> எத்தனை யானைகள் அம்பால் தாக்கப்பட்டுத் தொழிலின்றி இறந்தன! வெற்றிப் புகழ் கொண்ட பெருமைக்குரிய குதிரைகள் எல்லாம் வலிமை வாய்ந்த படைவீரர்களுடன் போர்க்களத்தில் மாண்டன. தேரில் வந்த வீரர்கள் எல்லாம் தாம் பிடித்த கேடயம் தங்கள் கண்களை மறைக்க ஒருங்கே இறந்தனர். இறுகக்கட்டப்பட்ட, மயிருடன் கூடிய முரசுகள் அவற்றைத் தாங்குவோர் இல்லாமல் கிழே கிடந்தன. சந்தனம் பூசிய மார்பில் நெடிய வேல் பாய்ந்ததால் இரு வேந்தர்களும் போர்க்களத்தில் இறந்தனர். வயலில் விளைந்த ஆம்பல் தண்டால் செய்த வளையலணிந்த கையினை உடைய மகளிர் பசிய (வளமான) அவலை உண்டு குளிர்ந்த நீரில் பாய்ந்து விளையாடும், புது வருவாய் குறையாத அழகிய குடியிருப்புகள் அடங்கிய அகன்ற இடங்களை உடைய நாடு இனி என்ன ஆகுமோ?<br /><br /><strong>சிறப்புக் குறிப்பு:</strong> அறவழியில் போர் செய்யும் குணங்களை உடைய வீரர்களைச் “சான்றோர்” என்பது மரபு. <br /><br />தோலில் உள்ள மயிரை நீக்காமல் செய்யபட்ட முரசு “மயிர்க்கண் முரசு” என்று அழைக்கப்பட்டது.முனைவர். பிரபாகரன்http://www.blogger.com/profile/08741873196318750290noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-178213659587445582.post-85953074050413715642011-04-01T13:07:00.000-07:002011-04-01T13:10:51.683-07:0062. போரும் சீரும்! <strong>பாடியவர்:</strong> கழாத்தலையார் (62, 65, 270, 288, 289, 368). இவர் பெயர் கழார்த்தலையார் என்றும் கூறப்படுகிறது. கழார் என்னும் ஊரைச் சார்ந்ததவராக இருந்ததால் கழார்த்தலையார் என்ற பெயர் பெற்றிருக்கலாம். கழாத்தலையார் என்பது இவர் பெயராக இருந்திருக்குமானால், இவர் கழாத்தலை என்ற ஊரினராக இருந்திருக்கலாம். இவரை இருங்கோவேள் என்னும் குறுநிலமன்னனின் முன்னோர்களுள் ஒருவன் இகழ்ந்ததால், அந்நாட்டில் இருந்த அரையம் என்னும் ஊர் அழிந்ததாகக் கபிலர் புறநானூற்றுப் பாடல் 202-இல் குறிப்பிடுகிறார். இவர் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கை பெருவிறற்கிள்ளி, சேரமான் பெருஞ்சேரலாதன் ஆகியோரைப் பாடியவர்.<br /><strong>பாடப்பட்டோர்:</strong> சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்; சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி. <br /><strong>சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்:</strong> இவன் போர்வன்மையும் கொடைச் சிறப்பும் மிகுந்தவன் என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் தம் நூலில் கூறுகிறார். மற்றும், பதிற்றுப்பத்தில் ஆறாம் பத்தின் பதிகத்தில் கூறப்பட்டிருபபவன் இவனாக இருந்தால் இவனுக்குப் பிறகு சேர நாட்டை ஆட்சி செய்தவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனாவான் என்றும் கூறுகிறார். அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்களின் கருத்து வரலாற்று ஆசிரியர்களின் கருத்துகளிலிருந்து மாறுபடுகிறது. வரலாற்று ஆசிரியர்கள் (N. சுப்பிரமணியன், K. A. நீலகண்ட சாஸ்திரி) உதியஞ் சேரலாதன் என்ற சேர மன்னனின் மகனாகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் சேரமன்னனுக்கும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கும் இடையே நடந்த போரில் இருவரும் இறந்ததாகக் கூறுகின்றனர். ஆகவே, சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் ஒருவனே என்று தோன்றுகிறது.<br /><br />கரிகால் வளவனுக்கு இரண்டு மகன்கள் இருந்ததாக சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அந்த இரண்டு மகன்களுள் ஒருவன் பெயர் மணக்கிள்ளி, மற்றொருவன் பெயர் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி. மணக்கிள்ளி என்பவனின் மகள் நற்சோனை என்பவளை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மணம் புரிந்தான். கண்ணகிக்குச் சிலையெடுத்த சேரன் செங்குட்டுவனும் சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளும் இமயவரம்பனுக்கும் நற்சோனைக்கும் பிறந்த மகன்கள் என்று கூறப்படுகிறது. தேவி என்பவள் இமயவரம்பனின் மற்றொரு மனைவி. களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் இமயவரம்பனுக்கும் அவனது மனைவி தேவிக்கும் பிறத்த இரு மகன்கள்.<br /><br />இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இறந்த பிறகு, சேர நாட்டை, அவன் தம்பி பல்யானை செல்குழுக் குட்டுவன் என்பவன் ஆண்டதாகவும், அவனுக்குப் பிறகு, களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் சேர நாட்டை ஆண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலுக்குப் பிறகு, கண்ணகிக்குச் சிலையெடுத்த சேரன் செங்குட்டுவன் சேர நாட்டை ஆண்டதாகக் கூறப்படுகிறது. அவனுக்குப் பிறகு, ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் சேர நாட்டை ஆண்டதாகவும் கூறப்படுகிறது. <br /><br /><strong>வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி:</strong> இவன் கரிகால் வளவனின் இரு மகன்களுள் ஒருவன். கரிகால் வளவன் இறந்த பிறகு, இவன் புகார் நகரத்தைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டான். கிள்ளிவளவன், நலங்கிள்ளி மற்றும் மாவளத்தான் என்ற மூவரும் இவனுடைய மகன்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.<br /><br /><strong>பாடலின் பின்னணி:</strong> சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கும் இடையே நடந்த போரில் இரு மன்னர்களும் விழுப்புண்பட்டு இறந்தனர். போர்க்களத்தில், சேரமான் உயிர் நீங்கும் தறுவாயில் இருப்பதைக் கண்ட கழாத்தலையார் அவனைப் புகழ்ந்து பாடினார். சேரன் தன் கழுத்திலிருந்த மாலையைக் கழற்றி கழாத்தலையாருக்கு அணிவித்துப் பின்னர் இறந்தான். மன்னர்கள் இருவரும் இறப்பதைக் கண்ட புலவர் கழாத்தலையார் மிகுந்த வருத்தமுற்றார். “போரில் மன்னர்கள் இருவரும் இறந்தனர். அவர்களுடைய வெற்றியை அறைகூவும் முரசு ஓய்ந்தது. மன்னர்களின் மனைவியர் கைம்மை நோன்பை மேற்கொள்வதை விரும்பாது தம் கணவரைத் தழுவி உயிர் துறந்தனர். விண்ணுலகத்தில் உள்ள தேவர்கள் இந்த இரு மன்னர்களையும் விருந்தினராகப் பெற்றனர்” என்று இப்பாடலில் கூறுகிறார். <br /><br /><strong>திணை:</strong> தும்பை. பகைவரோடு போர் செய்வதற்கு ஆயத்தமாகும் பொழுது தும்பைப் பூவைச் சூடிக் கொள்ளல்.<br /><strong>துறை:</strong> தொகை நிலை. போர்க்களத்தில் அனைவரும் ஒருங்கே மாய்ந்ததைக் கூறுதல்.<br /><br /> வருதார் தாங்கி அமர்மிகல் யாவது?<br /> பொருதுஆண்டு ஒழிந்த மைந்தர் புண்தொட்டுக்<br /> குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி<br /> நிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்<br />5 எடுத்துஎறி அனந்தற் பறைச்சீர் தூங்கப்<br /> பருந்து அருந்துற்ற தானையொடு செருமுனிந்து<br /> அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்<br /> தாம்மாய்ந் தனரே; குடைதுளங் கினவே;<br /> உரைசால் சிறப்பின் முரசு ஒழிந்தனவே;<br />10 பன்னூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்<br /> இடம்கெட ஈண்டிய வியன்கண் பாசறைக்<br /> களங்கொளற்கு உரியோர் இன்றித், தெறுவர<br /> உடன்வீழ்ந் தன்றால் அமரே; பெண்டிரும்<br /> பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்<br />15 மார்பகம் பொருந்தி ஆங்கமைந் தனரே;<br /> வாடாப் பூவின் இமையா நாட்டத்து<br /> நாற்ற உணவி னோரும் ஆற்ற<br /> அரும்பெறல் உலகம் நிறைய<br /> விருந்துபெற் றனரால் பொலிகநும் புகழே!<br /><br /><strong>அருஞ்சொற்பொருள்: </strong><br />1. வரு = வருகின்ற; தார் = தூசிப்படை, படை; அமர் = போர்; மிகல் = வெற்றி; யாவது = எது, எவ்விதம். 2. ஆண்டு = அங்கு; மைந்தர் = வீரர். 4 நிறம் = ஒளி; கிளர்தல் = மிகுதல். 5. அனந்தல் = மந்த ஓசை; பறைச் சீர் = பறைக்குரிய தாளம்; தூங்கல் = ஆடல். 6. உற்ற = பொருந்திய; செரு = போர்; முனிந்து = வெகுண்டு. 7. மண்டல் = மிகுதல். 8. துளங்கல் = கலங்கல், அசைதல். 9. உரை = புகழ். 10. பைஞ்ஞிலம் = படைத்தொகுதி. 12. தெறு = அச்சம். 14 பாசடகு = பாசு + அடகு; பாசு = பசுமை; அடகு = கீரைக்கறி; மிசைதல் = உண்ட. 16. நாட்டம் = பார்வை. 17. ஆற்ற = மிக. 19. பொலிதல் = மிகுதல்.<br /><br /><strong>உரை:</strong> இனி, எதிர்த்து வரும் தூசிப்படையத் தடுத்துப் போரில் வெற்றி பெறுவது எப்படி? அப்போர்க்களத்தில் சண்டையிட்டு அங்கே புண்பட்ட வீரர்களின் புண்ணைத் தோண்டிக், குருதி தோய்ந்த சிவந்த கையால் தமது தலைமயிரைக் கோதிய, ஓளிமிக்க உருவத்தையுடைய பேய்ப்பெண்கள், மேன்மேலும் கொட்டுகின்ற மந்தமான தாளத்திற்க்கேற்ப ஆடுகின்றனர். இறந்த படைவீரர்களின் உடலைப் பருந்துகள் உண்ணுகின்றன. அத்தகைய படையோடு, சினந்து அறவழியில் போர்புரிந்த வீரமுடைய மன்னர்கள் இருவரும் இறந்தனர். அவரது குடைகள் தளர்ந்தன. அவர்களுடைய புகழ் மிகுந்த சிறப்புடைய முரசுகள் வீழ்ந்தன. நூற்றுக்கணக்கான படைவீரர்கள் அடங்கிய பலவகைப் படைகளும் இருக்க இடமில்லாதபடி நெருங்கி இருக்கும் அகன்ற பாசறைகளில், போர்க்களத்தைத் தம்முடையதாக்கிக் கொள்வோர் இல்லாமல், காண்போர்க்கு அச்சம் தரும் வகையில் போர் உடனே முடிந்தது. மன்னர்களின் மனைவியர் பசுமையான கீரைக்கறியை உண்டு, குளிர்ந்த நீரில் மூழ்கும் கைம்மை நோன்பை விரும்பாதவராய் தம் கணவரைத் தழுவி உடன் கிடந்தனர். வாடாத பூக்களையும், இமைகளைச் சிமிட்டாத பார்வையையும், நறுமணமுள்ள அவியாகிய உணவையும் உடைய தேவர்கள் பெறுதற்கரிய விருந்து பெற்றனர். உங்கள் புகழ் விளங்குவதாக.<br /><br /><strong>சிறப்புக் குறிப்பு:</strong> இரு வேந்தர்களும் ஒருங்கே இறந்ததைக் கூறுவதால் இப்பாடல் தொகைநிலையைச் சார்ந்ததாயிற்று.முனைவர். பிரபாகரன்http://www.blogger.com/profile/08741873196318750290noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-178213659587445582.post-45612471945894204282011-04-01T12:49:00.000-07:002011-04-01T12:57:47.372-07:0061. மலைந்தோரும் பணிந்தோரும்!<strong>பாடியவர்</strong>: கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக் குமரனார். இவரைப் பற்றிய குறிப்புகளை பாடல் 54-இல் காண்க<strong>.<br />பாடப்பட்டோன்:</strong> சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி. இச்சோழ மன்னன், சோழன் நலங்கிள்ளியின் மகன் என்று கருதப்படுகிறான். இலவந்திகை என்றால் குளத்தருகே உள்ள சோலை என்று பொருள். குளத்தருகே இருந்த சோலை ஒன்றில் இருந்த பள்ளியில் (படுக்கை அறையில்) இறந்ததால், இச்சோழமன்னன் சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி என்று அழைக்கப்பட்டான்.<br /><strong>பாடலின் பின்னணி:</strong> கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் சேட்சென்னியின் நாட்டின் வளங்களையும் அவன் போர் புரியும் ஆற்றலையும் இப்பாடலில் விரிவாகக் கூறுகிறார்.<br /><br /><strong>திணை:</strong> வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும். <br /><br /><strong>துறை:</strong> அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.<br /><br />கொண்டைக் கூழைத் தண்தழைக் கடைசியர்<br />சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்<br />மலங்குமிளிர் செறுவின் தளம்புதடிந் திட்ட<br />பழன வாளைப் பரூஉக்கண் துணியல்<br />5 புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை ஆக<br />விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி<br />நீடுகதிர்க் கழனிச் சூடுதடு மாறும்<br />வன்கை வினைஞர் புன்தலைச் சிறாஅர்<br />தெங்குபடு வியன்பழம் முனையின், தந்தையர்<br />10 குறைக்கண் நெடும்போர் ஏறி விசைத்தெழுந்து<br />செழுங்கோள் பெண்ணைப் பழந்தொட முயலும்<br />வைகல் யாணர் நன்னாட்டுப் பொருநன்<br />எஃகுவிளங்கு தடக்கை இயல்தேர்ச் சென்னி<br />சிலைத்தார் அகலம் மலைக்குநர் உளர்எனில்<br />15 தாமறி குவர்தமக்கு உறுதி; யாம்அவன்<br />எழு திணிதோள் வழுவின்றி மலைந்தோர்<br />வாழக் கண்டன்றும் இலமே; தாழாது<br />திருந்துஅடி பொருந்த வல்லோர்<br />வருந்தக் காண்டல் அதனினும் இலமே!<br /><br /><strong>அருஞ்சொற்பொருள்:<br /></strong>1. கொண்டை = மயிர் முடிச்சு; கூழை = தலை மயிர்; தழை = பச்சிலை; கடைசியர் = உழத்தியர், மருத நிலப் பெண்கள். 2. நெய்தல் = வெள்ளாம்பல்; கட்கும் = களைந்து எறியும். 3. மலங்கு = ஒரு வகை மீன்; மிளிர்தல் = ஒளிசெய்தல்; செறு = வயல்; தளம்பு = சேற்றைக் குழப்பிக் கட்டிகளை உடைத்து செம்மைப் படுத்தும் கருவி; தடிதல் = அறுத்தல், வெட்டல். 4. பழனம் = வயல்; வாளை = வாளை மீன்; பரூஉ = பருமை; துணியல் = துண்டு (சதை). 5. கண்ணுறை = மேலே தூவுவது. 6. விசித்தல் = விம்முதல், வீங்குதல்; மாந்தல் = உண்ணுதல், வருந்துதல். 7. சூடு = நெற்கதிர்க் கட்டு. 8. வினைஞர் = மருத நில மக்கள் (உழவர்கள்). 9. தெங்கு = தென்னை. 10. விசை = விரைவு. 11. செழுமை = வளமை; கோள் = குலை; பெண்ணை = பனைமரம். 12. வைகல் = நாள்; யாணர் = புதிய வருவாய். 13. எஃகு = வேல்; தடக்கை = பெரிய கை; சென்னி = நலங்கிள்ளி சேட்சென்னி. 14. சிலை = ஒளி; அகலம் = மார்பு; மலைத்தல் = போரிடுதல். 15. உறுதி = உறப்போவது (நேரப்போவது). 16. எழு = கணையமரம்; உறழ் = ஒத்தல்; திணி = வலிமை; வழு = தவறு. 17. தாழாது = விரைந்து. 18. திருந்துதல் = ஒழுங்குகாகுதல். <br /><br /><strong>உரை:</strong> கொண்டையாக முடிந்த முடியும், முடியில் செருகிய தழையும் உடைய மருதநிலப் பெண்கள், சிறிய வெள்ளாம்பலுடன் ஆம்பலையும் களைவர். வயல்களில் மலங்கு மீன்கள் ஒளிருகின்றன. அந்த வயல்களில் தளம்பைப் பயன்படுத்தியதால், பருத்த வாளை மீன்கள் துண்டிக்கப் படுகின்றன. புதுநெல்லைக் குத்தி ஆக்கிய வெண்மையான சோற்றின் மேல் அந்த வாளைமீன் துண்டுகளைத் தூவி, விலாப் புடைக்க உண்ட மயக்கத்தால், நெடிய நெற்கதிர்களின் கட்டுகளை வைக்கும் இடம் தெரியாமல் உழவர்கள் தடுமாறுவர். வலிய கைகளையுடைய உழவர்களின் இளஞ்சிறுவர்கள் தென்னை மரங்கள் தரும் தேங்காய்களை வெறுத்துத், தம் தந்தையரின் குறுகிய இடங்களில் உள்ள நெடிய வைக்கோற் போரில் விரைந்து ஏறி பனம்பழத்தைப் பறிக்க முயல்வர். நாள்தோறும் புதிய வருவாயையுடைய நல்ல நாட்டிற்கு அரசனாகிய நலங்கிள்ளி சேட்சென்னி, வேல் ஒளிரும் பெரிய கையினையும் நன்கு செய்யப்பட்ட தேரையும் உடையவன். ஒளி நிறைந்த மலர் மாலைகளை அணிந்த மார்பையுடைய சேட்சென்னியுடன் போர்புரிபவர்கள் இருப்பார்களானால், அவர்களுக்கு நேரப் போவதை அவர்கள் மட்டுமே அறிவார்கள். நாங்கள் கணையமரம் போன்ற வலிய தோள்களையுடைய அவனோடு போரிட்டவர்கள் வாழக்கண்டதில்லை. விரைந்து சென்று அவனது நல்லடியை அடைய வல்லோர் வருந்தக் கண்டது அதனினும் இல்லை.முனைவர். பிரபாகரன்http://www.blogger.com/profile/08741873196318750290noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-178213659587445582.post-32845383668647877902011-03-23T08:32:00.000-07:002011-03-23T08:35:57.899-07:0060. மதியும் குடையும்!<strong>பாடியவர்:</strong> உறையூர் மருத்துவன் தாமோதரனார் (60, 170, 321). உறையூரில் மருத்துவராகவும் புலவராகவும் வாழ்ந்தவர் தாமோதரனார். இவர் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனையும் பிட்டங்கொற்றனையும் பாடியவர்.<br /><strong>பாடப்பட்டோன்:</strong> சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 58-இல் காண்க.<br /><strong>பாடலின் பின்னணி:</strong> இப்பாடலில், உறையூர் மருத்துவன் தாமோதரனார், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் நாட்டிற்கு உண்டாகும் குறைகளை நீக்கி, நாட்டைக் காப்பதில் பெரு முயற்சியும் உழைப்பும் உடையவனாய் இருப்பதைப் புகழ்ந்து பாடுகிறார்.<br /><br /><strong>திணை:</strong> பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.<br /><strong>துறை:</strong> குடை மங்கலம்: அரசன் குடையைப் புகழ்ந்து பாடுவது குடை மங்கலம் எனப்படும்.<br /><br />முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச்<br />செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்<br />உச்சி நின்ற உவவுமதி கண்டு<br />கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த<br />5 சில்வளை விறலியும் யானும் வல்விரைந்து<br />தொழுதனம் அல்லமோ பலவே; கானல்<br />கழிஉப்பு முகந்து கல்நாடு மடுக்கும்<br />ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்<br />உரனுடை நோன்பகட்டு அன்ன எங்கோன்<br />10 வலன்இரங்கு முரசின் வாய்வாள் வளவன்<br />வெயில்மறைக் கொண்ட உருகெழு சிறப்பின்<br />மாலை வெண்குடை ஒக்குமால் எனவே.<br /><br /><strong>அருஞ்சொற்பொருள்:<br /></strong>1. நாப்பண் = நடுவே; திமில் = மரக்கலம். 2. செம்மீன் = செவ்வாய், திருவாதிரை; மாகம் = மேலிடம்; விசும்பு = ஆகாயம். 3. உவவு = முழுநிலா (பௌர்ணமி). 4. கட்சி = காடு; மஞ்ஞை = மயில்; சுரம் = வழி; முதல் = இடம். 5. வல் = விரைவு. 6. கானல் = கடற்கரை. 7. கழி = உப்பளம்; மடுத்தல் = சேர்த்தல். 8. ஆரை = ஆரக்கால்; சாகாடு = வண்டி; ஆழ்ச்சி = பதிவு அழுந்துவது. 9. உரன் = வலிமை; நோன் = வலிமை; பகடு = எருது. 10. வலன் = வெற்றி; இரங்கல் = ஒலி; வாய்வாள் = குறி தவறாத.<br /><br /><strong>கொண்டு கூட்டு:</strong> உவவுமதி கண்டு, விறலியும் யானும் தொழுதனம் அல்லமோ; எங்கோன், வளவன், வெண்குடை ஒக்கும் எனவே.<br /><br /><strong>உரை:</strong> கடலின் நடுவே உள்ள மரக்கலங்களிலுள்ள விளக்குப் போல, சிவந்த வீண்மீன் ஒளிறும் ஆகாயத்தின் உச்சியில் முழு நிலவு இருந்தது. அதைக் கண்டு அந்தச் சுரவழியில் வந்து கொண்டிருந்த, மயில் போன்ற, சில வளையல்களே அணிந்த விறலியும் நானும் விரைந்து பலமுறை தொழுதோம் அல்லவோ? அது ஏன் தெரியுமா? கடற்கரையிடத்து உப்பங்கழியில் விளைந்த உப்பைச் சுமந்துகொண்டு மலை நட்டுக்குச் செல்லும் ஆரக்காலையுடைய வண்டியைக் குண்டு குழிகளின் வழியே இழுத்துச் செல்லும் வலிய காளையைப்போன்றவன் எம் தலைவன். அவன் வெற்றியுடன் முழங்கும் முரசையும், குறி தவறாத வாளையுமுடையவன். வெயிலை மறைபப்பதற்காக அவன் கொண்ட அச்சம் பொருந்திய சிறந்த மாலை அணிந்த குடையைப் போன்றது அந்த முழு நிலா என்று நினைத்து அவ்வாறு தொழுதோம்.முனைவர். பிரபாகரன்http://www.blogger.com/profile/08741873196318750290noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-178213659587445582.post-76091660051606037972011-03-23T08:29:00.000-07:002011-03-23T08:32:36.483-07:0059. பாவலரும் பகைவரும்!<strong>பாடியவர்:</strong> பெருந்தலைச் சாத்தனார் (151,164,165, 205, 209, 294). இவர் பெருந்தலை என்னும் ஊரைச் சார்ந்தவர். பெருந்தலை என்ற பெயரில் தமிழ் நாட்டில் பல ஊர்கள் இருப்பதால் இவர் தமிழ் நாட்டில் எந்தப் பகுதியைச் சார்ந்தவர் என்று உறுதியாகக் கூறமுடியவில்லை என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார். அகநானூற்றில் இவர் இயற்றிய செய்யுள் ஒன்றில் (224) இவர் பெயர் ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் என்று குறிப்பிடப்படுவதால் இவரது பெற்றோர்கள் ஆவூர் மூலம் என்னும் ஊரைச் சார்ந்தவர் என்று கருதப்படுகிறது. இவர் தலை பெரிதாக இருந்ததால் இவர் பெருந்தலை என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார் என்றும் சிலர் கூறுவர்.<br /><br />வறுமையில் வாடிய புலவர்களில் பெருந்தலைச் சாத்தனாரும் ஒருவர். கடையெழு வள்ளல்கலின் காலத்திற்குப் பிறகு குமணன் என்று ஒருவள்ளல் இருந்தான். அவன் வண்மையாலும் வெற்றிகளாலும் பெரும் புகழ் பெற்றதைக் கண்டு பொறாமை கொண்ட அவன் இளவல் இளங்குமணன் குமணனின் நாட்டைக் கைப்பற்றினான். குமணன் காட்டிற்குச் சென்று அங்கு வாழ்ந்தான். பெருந்தலைச் சாத்தனார் குமணனைக் காட்டில் கண்டு அவனைப் புகழ்ந்து பாடினார். பெருந்தலைச் சாத்தனார்க்கு அளிப்பதற்கு குமணனிடம் பொருள் ஏதும் இல்லாததால் அவன் தன் வாளைப் பெருந்தலைச் சாத்தனாரிடம் கொடுத்துத் தன் தலையை வெட்டி இளங்குமணனிடம் கொண்டுபோய்க் கொடுத்தால் அவன் அவருக்குப் பரிசளிப்பான் என்று கூறினான். பெருந்தலைச் சாத்தனார் குமணனிடமிருந்து வாளை மட்டும் பெற்றுக் கொண்டு இளங்குமணனிடம் சென்று சமாதானம் பேசி குமணனையும் இளங்குமணனையும் ஒருவரோடு ஒருவர் அன்புகொள்ளச் செய்தார்.<br /><br />இவர் புறநானூற்றில் ஆறு செய்யுட்களும் அகநானூற்றில் இரண்டு செய்யுட்களும் (13, 224) நற்றிணையில் ஒரு செய்யுளும் (262) இயற்றியவர்.<br /><strong>பாடப்பட்டோன்:</strong> பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த காலத்தில், அவன் தம்பி வெற்றிவேற் செழியன், கொற்கையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டின் மற்றொரு பகுதியை ஆண்டுவந்தான். கோவலனைக் கள்வன் என்று எண்ணித் தவறாகத் தான் கொலை செய்ததை உணர்ந்த ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் “யானோ அரசன்? யனே கள்வன்” என்று கூறி உயிர் துறந்தான். அவன் உயிர் துறந்த பின், அவன் தம்பி வெற்றிவேற் செழியன், நெடுஞ்செழியனின் நாட்டின் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டான். அவன் சித்திரமாடம் என்ற இடத்தில் இறந்ததால், வெற்றிவேற் செழியன், பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்று அழைக்கப்பட்டன்.<br /><strong>பாடலின் பின்னணி:</strong> பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறனின் மாலை சூடிய மார்பையும், தாள் அளவு நீண்ட வலிய கையையும் பாரட்டி, “ வேந்தே, நீ அருள் செய்வதில் சிறந்தவன்; பொய் சொல்லாதவன். பகைவர்க்கு மிகுந்த வெப்பமுள்ள கதிரவனைப் போன்றவன்; எம் போன்றவர்க்குக் குளிர்ந்த திங்களைப் போன்றவன்” என்று புலவர் பெருந்தலைச் சாத்தனார் இப்பாடலில் அவனைப் புகழ்கிறார்.<br /><br /><strong>திணை:</strong> பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.<br /><strong>துறை:</strong> பூவை நிலை: மனிதரைத் தேவரோடு ஒப்பிட்டுக் கூறுதல் பூவை நிலை எனப்படும்.<br />ஆரம் தாழ்ந்த அணிகிளர் மார்பின்<br />தாள்தோய் தடக்கைத் தகைமாண் வழுதி!<br />வல்லை மன்ற நீநயந் தளித்தல்!<br />தேற்றாய் பெரும! பொய்யே; என்றும்<br />5 காய்சினம் தவிராது கடல்ஊர்பு எழுதரும்<br />ஞாயிறு அனையை நின் பகைவர்க்குத்;<br />திங்கள் அனையை எம்ம னோர்க்கே.<br /><br /><strong>அருஞ்சொற்பொருள்:<br /></strong>1. ஆரம் = மாலை; அணி = அழகு; கிளர்தல் = மிகுதல். 2. தகை = தகுதி. 3. வல்லை = வலிமை உடையவன்; மன்ற = நிச்சயமாக, தெளிவாக; நயந்து அளித்தல் = அருள் செய்தல். 4. தேற்றல் = அறிவித்தல் (சொல்லுதல்); காய்தல் = சினத்தல், சுடுதல். கடல் ஊர்பு = கடலிலிருந்து. 6. அனைய = போன்றாய்.<br /><br /><strong>உரை:</strong> மாலை தவழும் அழகு மிகுந்த மார்பையும், முழங்காலைத் தொடுமளவுக்கு நீண்ட கையையும் உடைய மாட்சிமைக்குரிய வழுதி! நீ யாவரும் மகிழும்படி அவர்களுக்கு அருள் செய்வதில் உண்மையாகவே வல்லவன். நீ என்றும் பொய்யே கூறமாட்டய். உன் பகைவர்க்கு, நீ என்றும் கடும் வெப்பம் நீங்காமல் கடலிடத்தே இருந்து கிளர்ந்து எழும் ஞாயிறைப் போன்றவன். எம்போன்றவர்களுக்கு, நீ குளிர்ந்த திங்களைப் போன்றவன்.<br /><br /><strong>சிறப்புக் குறிப்பு:</strong> முழங்கால் அளவுக்குக் கைகள் நீண்டு இருப்பது ஆண்களுக்கு அழகு என்று கருதப்பட்டதால், புலவர், “தாள் தோய் தடக்கை” என்று குறிப்பிடுகிறார்.முனைவர். பிரபாகரன்http://www.blogger.com/profile/08741873196318750290noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-178213659587445582.post-52145863845171965872011-03-23T08:25:00.000-07:002011-03-23T08:29:41.770-07:0058. புலியும் கயலும்!<strong>பாடியவர்:</strong> காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 57-இல் காண்க.<br /><strong>பாடப்பட்டோர்:</strong> சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும். சோழன் பெருந்திருமாவளவன், குராப்பள்ளி என்னும் இடத்தில் இறந்ததால் சோழன் குராப்பளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்று அழைக்கப்பட்டான். இவன் போர் செய்வதில் வல்லவன். இவன் காலத்தில் வாழ்ந்த சேரமன்னன், கொங்கு நாட்டவர்களின் துணையோடு இவனோடு போரிட்டான். அப்போரில், இச்சோழ மன்னன் வெற்றி பெற்றான். இவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் மிகுந்த நட்புடையவர்களாக இருந்தார்கள்.<br /><strong>பாடலின் பின்னணி:</strong> ஒருசமயம், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கே இருந்தனர். அதைக் கண்ட புலவர் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பெருமகிழ்ச்சி அடைந்தார். சோழனும் பாண்டியனும் ஒருங்கே இருந்ததைப் பலராமனும் திருமாலும் ஒருங்கே இருப்பதற்கு ஒப்பிட்டு, “அவர்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருந்தால் இவ்வுலகம் அவர்கள் கையகப்படுவது உறுதி என்று இப்பாடலில் கூறுகிறார்.<br /><br /><strong>திணை:</strong> பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.<br /><strong>துறை:</strong> உடன் நிலை: ஒருங்கே இருக்கும் இருவரைப் பாடுவது உடன் நிலை எனப்படும்.<br /><br />நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவனே<br />முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்<br />கொழுநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்<br />தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது<br />5 நல்லிசை முதுகுடி நடுக்குஅறத் தழீஇ<br />இளையது ஆயினும் கிளைஅரா எறியும்<br />அருநரை உருமின் பெருநரைப் பொறாஅச்<br />செருமாண் பஞ்சவர் ஏறே; நீயே<br />அறந்துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே,<br />10 நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென<br />வரைய சாந்தமும் திரைய முத்தமும்<br />இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும்<br />தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே!<br />பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்<br />15 நீல்நிற உருவின் நேமி யோனும்என்று<br />இருபெருந் தெய்வமும் உடன் நின் றாஅங்கு<br />உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி<br />இந்நீர் ஆகலின் இனியவும் உளவோ?<br />இன்னும் கேண்மின்நும் இசைவா ழியவே;<br />20 ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும்<br />உடனிலை திரியீர் ஆயின் இமிழ்திரைப்<br />பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம்<br />கையகப் படுவது பொய்யா காதே;<br />அதனால், நல்ல போலவும் நயவ போலவும்<br />25 தொல்லோர் சென்ற நெறியர் போலவும்<br />காதல் நெஞ்சின்நும் இடைபுகற்கு அலமரும்<br />ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது<br />இன்றே போல்கநும் புணர்ச்சி; வென்றுவென்று<br />அடுகளத்து உயர்கநும் வேலே; கொடுவரிக்<br />30 கோள்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி<br />நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த<br />குடுமிய ஆகபிறர் குன்றுகெழு நாடே.<br /><br /><strong>அருஞ்சொற்பொருள்:<br /></strong>1. கிழவன் = உரியவன். 2. முழுமுதல் = அடிமரம்; கோளி = பூவாது காய்க்கும் மரம்; கொழு நிழல் = குளிர்ந்த நிழல். 3. சினை = கிளை; வீழ் = மரவிழுது. 4. தொல்லோர் = முன்னோர்; துளங்கல் = கலங்கல். 5. முதுகுடி = பழங்குடி; நடுக்கு = நடுக்கம் = அச்சம்; தழீஇ = உள்ளடக்கிக் கொண்டு; அரா = பாம்பு; கிளை = மந்தை. 7. அரு = பொறுத்தற்கரிய; உரும் = இடி; நரை = வெண்மை. 8. செரு = போர்; பஞ்சவன் = பாண்டியன். 9. துஞ்சுதல் = தங்குதல்; உறைந்தை = உறையூர்; பொருநன் = அரசன். 11. வரை = மலை; சாந்தம் = சந்தனம்; திரை = கடல் அலை. 12. இமிழல் = ஒலித்தல்; குரல் = ஒலி ஓசை. 15. நேமி = கடல்; நேமியோன் = திருமால். 17. உரு = அச்சம், நடுக்கம்; உட்கு = அச்சம். 18. இந்நீர் = இத்தன்மை. 19. இசை = புகழ். 20. ஆற்றுதல் = உதவுதல். 21. திரிதல் = மாறுதல். 22. பௌவம் = கடல். 24. நயத்தல் = அன்புசெய்தல், நட்பு கொள்ளுதல், நீதி செய்தல். 26. அலமரல் = வருந்தல். 27. கொடு = வளைவு. 28. கோள் = வலி; மா = புலி; குயிற்றல் = பதித்தல்; தொடு = தோண்டப்பட்ட; பொறி = அடையாளம். 29. கொடுவரி = புலி. 31. கெண்டை = கயல். 32. குடுமி = சிகரம், உச்சி.<br /><br /><strong>கொண்டு கூட்டு:</strong> நீயே, காவிரிக் கிழவனை; இவனே பஞ்சவர் ஏறே; நீயே உறந்தைப் பொருநனை; இவனே கூடல் வேந்தே; பனைக் கொடியோனும் நேமியோனும் உடன் நின்றாஅங்கு இருவரும் உடனிலை ஆயின் மாநிலம் கையகப்படும்; அதனால், இன்றே போல்க நும் புணர்ச்சி; பிறர் குன்றுகெழு நாடு கோண்மாவும் கெண்டையும் பொறித்த குடுமிய வாக.<br /><br /><strong>உரை:</strong> நீ குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன்; இவனோ, பருத்த அடியுள்ள ஆலமரத்தின் அடிமரம் வெட்டப்பட்டு அழிந்தாலும், அதன் நெடிய நிழல் தரும் கிளைகளை விழுதுகள் தாங்குவதைப்போல், முன்னோர்கள் இறந்தாலும், தான் தளராது, நல்ல புகழுள்ள தன் பழங்குடியைத் தடுமாற்றமில்லாமல் காத்துத், தான் சிறிதே ஆயினும் பாம்பைக் கூட்டத்தோடு அழிக்கும் வெண்ணிற இடிபோல் பகவரைக் காணப் பொறாமல் போரில் சிறந்த பாண்டியர்களில் சிங்கம் போன்றவன்.<br /><br />நீயோ, அறம் நிலைபெற்ற உறையூரின் தலைவன். இவனோ நெல்லும் நீரும் அனைவருக்கும் எளிதில் கிடைப்பவை என்று கருதி யாவர்க்கும் பெறுதற்கரிய மலையில் விளையும் சந்தனம், கடலில் விளையும் முத்து, முழங்கும் மும்முரசுகள் ஆகியவற்றுடன் தமிழ் பொருந்திய மதுரையில் செங்கோல் செலுத்தும் வேந்தன்.<br /><br />பால போன்ற வெண்ணிற மேனியும் பனைக்கொடியும் உடைய பலராமனும் நீல நிற மேனியையுடைய திருமாலும் ஆகிய இரண்டு கடவுளரும் ஒருங்கே கூடி இருந்தாற் போல் அச்சம் பொருந்திய காட்சியொடு நீங்கள் இருவரும் விளங்குவதைவிட இனிய காட்சியும் உண்டோ? உங்கள் புகழ் நெடுங்காலம் வாழ்வதாக! மேலும் கேட்பீராக!<br /><br />நீங்கள் ஒருவர்க்கு ஒருவர் உதவுவீர் ஆகுக. நீங்கள் இருவரும் கூடியிருக்கும் இந்நிலை மாறாதிருப்பின் கடல் சூழ்ந்த, பயனுள்ள இவ்வுலகம் உங்கள் கைவசமாவது உறுதி; ஆதலால், நல்லவர்களாகவும், நடுவுநிலைமை தவறாதவர்களாகவும், உங்கள் முன்னோர்கள் சென்ற நெறியைப் பின்பற்றி, அன்போடு இருந்து, உங்களைப் பிரிக்கத் தவிக்கும் பகைவர்களின் சொற்களைக் கேளாமல், இன்று போலவே என்றும் சேர்ந்திருங்கள். போர்க்களத்தில் மேலும் மேலும் வெற்றிகளைப் பெற்று உங்கள் வேல் உயர்வதாகுக; பிறருடைய நாடுகளிலுள்ள குன்றுகளில், வளைந்த கோடுகளையுடைய புலிச் சின்னமும், பெரிய நீரில் வாழும் கயல்மீன் சின்னமும் பொறிக்கப்படுவதாகுக.முனைவர். பிரபாகரன்http://www.blogger.com/profile/08741873196318750290noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-178213659587445582.post-48239080511221642652011-03-23T08:23:00.000-07:002011-03-23T08:25:48.677-07:0057. காவன்மரமும் கட்டுத்தறியும்!<strong>பாடியவர்:</strong> காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் (57, 58,169,171, 353). இவர் புறநானூற்றில் ஐந்து பாடல்கள் இயற்றியது மட்டுமல்லாமல், அகநானூற்றில் மூன்று பாடல்களும் (107, 123, 285), குறுந்தொகையில் ஒரு பாடலும் (297) இயற்றியவர்.<br /><strong>பாடப்பட்டோன்:</strong> பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 55-இல் காண்க.<br /><strong>பாடலின் பின்னணி:</strong> ஒரு சமயம், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் பகைவருடன் போர் செய்வதற்குச் சென்று கொண்டிருந்தான். அவனுடைய வலிமையையும் போர் புரியும் ஆற்றலையும் நன்கு அறிந்த காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், “வேந்தே, உன் வீரர்கள் பகைவர்களின் நாட்டு வயல்களை கொள்ளை கொண்டால் கொள்ளட்டும்; வேண்டுமானால் அவர்களின் ஊர்களுக்குத் தீ மூட்டுக; ஆனால், அவர்களின் காவல் மரங்களை வெட்டுவதைத் தவிர்ப்பாயாக.” என்று இப்பாடலில் அவனுக்கு அறிவுறை கூறுகிறார்<br /><br /><strong>திணை:</strong> வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.<br /><strong>துறை:</strong> துணை வஞ்சி. பிறரை வெற்றி கொள்ள நிற்பவனுக்குச் சந்து செய்வித்தல்.<br /><br />வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்<br />புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன<br />உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற!<br />நின்னொன்று கூறுவது உடையேன்; என்னெனின்<br />5 நீயே, பிறர்நாடு கொள்ளும் காலை அவர்நாட்டு<br />இறங்குகதிர் கழனிநின் இளையரும் கவர்க;<br />நனந்தலைப் பேரூர் எரியும் நக்க;<br />மின்னுநிமிர்ந் தன்னநின் ஒளிறுஇலங்கு நெடுவேல்<br />ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்<br />10 கடிமரம் தடிதல் ஓம்புநின்<br />நெடுநல் யானைக்குக் கந்தாற் றாவே.<br /><br /><strong>அருஞ்சொற்பொருள்:<br /></strong>1. வல்லார் = திறமையற்றவர்; வல்லுநர் = திறமையுள்ளவர். 3. உரை = சொல்; சாலல் = மிகுதியாதல், மேன்மையுடைத்தாதல். 6. இறங்குதல் = வளைதல்; இளையர் = வேலைக்காரர், வீரர்; கவர்தல் = எடுத்தல் (கொள்ளையடித்தல்). 7. நனம் = அகற்சி; நக்க = சுடுக. 8. இலங்கல் = விளங்குதல். 9. ஒன்னார் = பகைவர்; செகுத்தல் = அழித்தல்; என்னதூஉம் = சிறிதும். 10. கடிமரம் = பகைவர் அணுகாவண்ணம் வளர்த்துக் காக்கப்படும் காவல் மரம்; தடிதல் = வெட்டல்; ஓம்புதல் = தவிர்தல். 11. கந்து = யானை கட்டும் தறி; ஆற்றுதல் = கூடியதாதல்.<br /><br /><strong>கொண்டு கூட்டு:</strong> மாற, நின் யானைக்கு கந்து ஆற்றாவாதலால் கடி மரந் தடிதல் ஓம்பு எனக் கூட்டுக.<br /><br /><strong>உரை:</strong> திறமையற்றவர்களாக இருந்தாலும் திறமையுடையவர்களாக இருந்தாலும், உன்னைப் புகழ்வோர்க்கு அருள் புரிவதில் நீ திருமாலைப் போன்றவன். சொல்லுதற்கரிய புகழ் பொருந்திய மாறனே! நான் உன்னிடம் ஒன்று கூறுவேன். அது என்னவென்றால், நீ பிறர் நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் பொழுது, அவர்களின் நாட்டில், வளைந்த கதிர்களையுடய வயல்களை உன்னுடய வீரர்களும் கொள்ளை கொள்ளட்டும்; அகன்ற பெரிய இடங்கள் உள்ள பெரிய ஊர்களைத் தீயால் வேண்டுமானால் எரிப்பாயாக; மின்னலைப் போல் ஒளியுடன் விளங்கும் உன்னுடைய நெடிய வேல், பகைவர்களை அழித்தாலும் அழிக்கட்டும்; அவர்களுடைய காவல் மரங்களை வெட்டுவதை மட்டும் தவிர்ப்பாயாக. ஏனெனில், உன் நெடிய யானைகளுக்கு அம்மரங்கள் கட்டுத் தறியாகும் தகுதி அற்றவை.<br /><br /><strong>சிறப்புக் குறிப்பு:</strong> காவல் மரங்களை வெட்டினால் போர் முடிவுபெறும். ஆகவே, காவல் மரங்களை வெட்டாமல் இருந்தால், பகைவர்கள் பணிந்து திறை கட்டுவதற்கு உடன்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால், புலவர், காவல்மரங்களை வெட்டுவதைத் தவிர்த்துப் பகைவர்களுடன் சமாதானமாகப் போவதற்கு வழிவகுக்குமாறு இப்பாடலில் பாண்டியனுக்கு அறிவுரை கூறுகிறார். இப்பாடலில், புலவர் சமாதானத்துக்கு வழிகாட்டுவதால், இப்பாடல் துணைவஞ்சி என்னும் துறையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.முனைவர். பிரபாகரன்http://www.blogger.com/profile/08741873196318750290noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-178213659587445582.post-20719382638285589212011-03-23T08:20:00.000-07:002011-03-23T08:23:02.877-07:0056. கடவுளரும் காவலனும்!<strong>பாடியவர்:</strong> மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் (56,189, 395). இவர் மதுரைக் கணக்காயனாரின் மகன் என்பதனால் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்று அழைக்கப்பட்டார். இவரும் மதுரை நக்கீரர் என்று அழைக்கப்பட்டவரும் ஒருவரே என்பது ஒரு சாரர் கருத்து. வேறு சிலர், மதுரை நக்கீரர் வேறு இவர் வேறு என்பர். இவர் கடைசங்கத்தின் தலைவராக இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் தெளிந்த அறிவும் சிறந்த புலமையும் உடையவர். இவர் புறநானூற்றில் மூன்று செய்யுட்களையும் (56, 189, 395), அகநானூற்றில் 17 செய்யுட்களையும், நற்றிணையில் 7 செய்யுட்களையும், குறுந்தொகையில் 8 செய்யுட்களையும் இயற்றியவர். மற்றும், பத்துப்பாட்டில் முதலாவதாகிய திருமுருகாற்றூப்படையையும் ஏழாவதாகிய நெடுநல்வாடையையும் இய்ற்றியவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. இறையனார் அகப்பொருளுக்கு இவர் எழுதிய உரை மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.<br /><br />குறுந்தொகையில், “கொங்குதேர் வாழ்க்கை” என்று தொடங்கும் பாடலை (குறுந்தொகை - 2) சிவபெருமான் இயற்றியதாகக் கருதப்படுகிறது. அப்பாடலில் பொருள் குற்றம் இருப்பதாக நக்கீரர் கூறியதாகவும், அப்பொழுது சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து தான் யார் என்பதை நக்கீரருக்குத் தெரிவித்தாகவும், நக்கீரர், “நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே” என்று சொன்னதாகவும் திருவிளையாடல் புராணத்தில் கூறப்படுகிறது. (குறுந்தொகை, புலவர் துரை இராசாராம், திருமகள் நிலையம்)<br /><strong>பாடப்பட்டோன்:</strong> பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 55-இல் காண்க.<br /><strong>பாடலின் பின்னணி:</strong> உலகம் காக்கும் கடவுளர் சிவன், பலராமன், திருமால், முருகன் ஆகிய நால்வரையும் ஒவ்வொரு வகையில் ஒத்திருப்பதாகக் கூறி, “வேந்தே, மகளிர் தரும் மதுவை அருந்தி இன்பங்களை நுகர்ந்து, உலகின் இருளை நீக்கும் ஞாயிற்றைப் போலவும், திங்களைப் போலவும் நீ நிலைபெற்று வாழ்க” என்று இப்பாடலில் நக்கீரர் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை வாழ்த்துகிறார்.<br /><br /><strong>திணை:</strong> பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.<br /><strong>துறை:</strong> பூவை நிலை: மனிதரைத் தேவரோடு ஒப்பிட்டுக் கூறுதல் பூவை நிலை எனப்படும்.<br /><br />ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை<br />மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும்,<br />கடல்வளர் புரிவளை புரையும் மேனி<br />அடல்வெந் நாஞ்சில் பனைக்கொடி யோனும்,<br />5 மண்ணுறு திருமணி புரையும் மேனி<br />விண்ணுயர் புள்கொடி விறல்வெய் யோனும்<br />மணிமயில் உயரிய மாறா வென்றிப்<br />பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனும்என<br />ஞாலம் காக்கும் கால முன்பின்<br />10 தோலா நல்இசை நால்வர் உள்ளும்<br />கூற்றுஒத் தீயே மாற்றருஞ் சீற்றம்;<br />வலிஒத் தீயே வாலி யோனைப்;<br />புகழ்ஒத் தீயே இகழுநர் அடுநனை;<br />முருகுஒத் தீயே முன்னியது முடித்தலின்;<br />15 ஆங்குஆங்கு அவரவர் ஒத்தலின் யாங்கும்<br />அரியவும் உளவோ நினக்கே? அதனால்<br />இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈயா<br />யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்<br />பொன்செய் புனை கலத்து ஏந்தி நாளும்<br />20 ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து<br />ஆங்கினிது ஒழுகுமதி, ஓங்குவாள் மாற!<br />அங்கண் விசும்பின் ஆரிருள் அகற்றும்<br />வெங்கதிர்ச் செல்வன் போலவும் குடதிசைத்<br />தண்கதிர் மதியம் போலவும்<br />25 நின்று நிலைஇயர் உலகமோடு உடனே.<br /><br /><strong>அருஞ்சொற்பொருள்:</strong><br />1. ஏறு = காளைமாடு; வலன் = வெற்றி; எரி = ஒளி,நெருப்பு; மருள் - உவமை உருபு; அவிர் = ஒளி. 2. மாற்று = எதிர்; கணிச்சி = சிவனுடைய ஆயுதம்; மணி = நீலமணி; மிடறு = கழுத்து. 3. புரி = முறுக்கு; வளை = சங்கு; புரைதல் = ஒத்தல்; அடல் = கொல்லுதல். 4. அடல் = கொல்லுதல்; நாஞ்சில் = கலப்பை. 5. மண்ணுதல் = கழுவுதல். 6. விறல் = வெற்றி; வெய்யோன் = விருப்பம் உடையவன். 7. மணி = நீலமணி; மாறா = மாறாத. 8. பிணிமுகம் = மயில். 9. முன்பு = வலிமை. 10. தோலா = தோல்வி காணாத. 11. கூற்று = எமன் (இங்கு சிவனைக் குறிக்கிறது). 12. வாலி = வெண்ணிறமுடையோன் (பலராமன்). 13. இகழுநர் = பகைவர். 14. முன்னுதல் = நினைத்தல். 17. அருகுதல் = குறைதல். 20. மடுத்தல் = உண்ணுதல் (ஊட்டுதல்). 23. குடதிசை = மேற்குத் திசை. 25. நிலைஇயர் = நிலைபெறுவாயாக.<br /><br /><strong>உரை:</strong> காளைக்கொடியை வெற்றியின் அடையாளமாக உயர்த்திப் பிடித்து, நெருப்புப் போல் ஒளிவிடும் சடையோடும், ஒப்பற்ற கணிச்சி என்னும் ஆயுதத்தோடும், நீலநிறக் கழுத்தோடும் காட்சி அளிப்பவன் சிவபெருமான். கடலில் வளரும் முறுக்கிய சங்கு போன்ற வெண்ணிற மேனியும், கொல்லுதலை விரும்பும் கலப்பையும், பனைக்கொடியும் உடையவன் பலராமன். கழுவப்பட்ட அழகிய நீலமணி போன்ற உடலும், வானளாவ உயர்ந்த கருடக் கொடியும் கொண்டு வெற்றியை விரும்புபவன் திருமால். நீலமணி போன்ற நிறத்தையுடைய மயிற்கொடியும், உறுதியான வெற்றியும், மயிலை ஊர்தியாகவும் (வாகனமாகவும்) கொண்ட ஓளிபொருந்தியவன் முருகன். இந்நான்கு கடவுளரும் உலகம் காக்கும் வலிமையும் அழியாத புகழும் உடையவர்கள். இந்த நால்வருள்ளும், உன்னுடைய நீங்காத சினத்தால் நீ அழிக்கும் கடவுளாகிய சிவனுக்கு ஒப்பானவன்; வலிமையில் பலராமனுக்கு ஒப்பானவன்; புகழில் பகைவரைக் கொல்லும் திருமாலுக்கு ஒப்பானவன்; நினைப்பதை முடிப்பதில் முருகனுக்கு ஒப்பானவன். இவ்வாறு ஆங்காங்கு அந்த அந்தக் கடவுளை ஒத்தவனாக இருப்பதால், உன்னால் செய்ய முடியாத செயலும் உண்டோ? அதனால், இரப்போர்க்கு அரிய அணிகலன்களை வழங்கி, யவனர் நல்ல கலங்களில் கொண்டுவந்த, குளிர்ந்த மணமுள்ள மதுவைப் பொன்னால் செய்யப்பட்ட அழகிய கிண்ணங்களில் ஏந்தி வந்து, ஓளிபொருந்திய வளையல் அணிந்த மக்ளிர் உனக்கு நாள்தோறும் கொடுக்க, அதைக் குடித்து, மகிழ்ச்சியோடு சிறப்பாக இனிது வாழ்வாயாக.<br /><br />ஓங்கிய வாளையுடைய பாண்டியன் நன்மாறனே! அழகிய ஆகாயத்தில் நிறைந்த இருளை அகற்றும் கதிரவனைப் போலவும் மேற்குத் திசையில் தோன்றும் குளிர்ந்த கதிர்களையுடைய திங்களைப் போலவும் இவ்வுலகத்தோடு நின்று நிலைபெற்று நீ வாழ்வாயாக.<br /><br /><strong>சிறப்புக் குறிப்பு:</strong> இப்பாடலில், பாண்டியனை சிவன், பலராமன், திருமால் மற்றும் முருகன் ஆகிய கடவுளர்க்கு ஒப்பிடுவதால், இப்பாடல் பூவை நிலையைச் சார்ந்ததாயிற்று.முனைவர். பிரபாகரன்http://www.blogger.com/profile/08741873196318750290noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-178213659587445582.post-8726263244711884372011-03-04T10:04:00.000-08:002011-03-04T10:07:19.301-08:0055. அறநெறி முதற்றே அரசின் கொற்றம்<strong>பாடியவர்:</strong> மதுரை மருதன் இளநாகனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 52-இல் காண்க.<br /><strong>பாடப்பட்டோன்:</strong> பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் (55 - 57,196, 198). இலவந்திகை என்ற சொல்லுக்கு நீர்நிலையைச் சார்ந்த சோலை என்று பொருள். இப்பாண்டிய மன்னன் ஒருஇலவந்திகையில் இருந்த பள்ளியறையில் இறந்ததால் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்று அழைக்கப்பட்டான். இவன் கொடையிலும் வீரத்திலும் சிறந்தவன். இவனைப் பாடிய புலவர்கள்: மதுரை மருதன் இளநாகனார், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார், ஆவூர் மூலங்கிழார், வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்.<br /><strong>பாடலின் பின்னணி:</strong> படை வலிமை மிகுந்ததாகவும் சிறப்புடையதாகவும் இருந்தாலும் அரசனுடய வெற்றிக்கு அடிப்படைக் காரணம் அறநெறிதான் என்று மதுரை மருதன் இளநாகனார் இப்பாடலில் நன்மாறனுக்கு அறிவுரை கூறுகிறார்.<br /><br /><strong>திணை:</strong> பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.<br /><strong>துறை:</strong> செவியறிவுறூஉ. அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்.<br /><br />ஓங்குமலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ<br />ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்<br />பெருவிறல் அமரர்க்கு வெற்றி தந்த<br />கறைமிடற்று அண்ணல் காமர் சென்னிப்<br />5 பிறைநுதல் விளங்கும் ஒருகண் போல<br />வேந்து மேம்பட்ட பூந்தார் மாற,<br />கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும்<br />நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகல்மறவரும்என<br />நான்குடன் மாண்ட தாயினும் மாண்ட<br />10 அறநெறி முதற்றே அரசின் கொற்றம்;<br />அதனால், நமரெனக் கோல்கோ டாது,<br />பிறர்எனக் குணங் கொல்லாது,<br />ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்,<br />திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும்,<br />15 வானத்து அன்ன வண்மையும் மூன்றும்<br />உடையை ஆகி இல்லோர் கையற<br />நீநீடு வாழிய நெடுந்தகை! தாழ்நீர்<br />வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்<br />நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறைக்<br />20 கடுவளி தொகுப்ப ஈண்டிய<br />வடுஆழ் எக்கர் மணலினும் பலவே!<br /><br /><strong>அருஞ்சொற்பொருள்:<br /></strong>1. ஓங்கு = உயர்ந்த; ஞாண் = கயிறு; கொளீஇ = கொண்டு. 2. கணை = அம்பு; எயில் = ஊர், புரம், மதில், அரண்; உடற்றுதல் = அழித்தல். 3.விறல் = வலிமை; அமரர் = தேவர். 4. மிடறு = கழுத்து; அண்ணல் = தலைவன், பெரியவன்; காமர் = அழகு; சென்னி = தலை, முடி. 6.மாறன் = பாண்டியன். 7. கதழ்தல் = விரைதல்; பரிதல் = ஓடுதல்; கலி = செருக்கு; மா = குதிரை. 8. நிமிர் = உயர்ந்த; நெஞ்சு = துணிவு; புகல் = விருப்பம் (போரை விரும்பும்). 9. மாண்டது = மாண்புடையது. 10. கொற்றம் = அரசியல் (ஆட்சி). 11. நமர் = நம்முடையவர். 13. திறல் = வெற்றி, வலிமை. 14. சாயல் = மென்மை. 15. வண்மை = ஈகை. 16. கையறுதல் = இல்லாமற் போதல். 17. நெடுந்தகை = பெரியோன்; தாழ்நீர் = ஆழமான நீர். 18. புணரி = அலைகடல். 20. கடு = விரைவு. 21. வடு = கருமணல்; எக்கர் = மணற்குன்று.<br /><br /><strong>கொண்டு கூட்டு:</strong> பூந்தார் மாற, நெடுந்தகை, நான்குடன் மாண்ட தாயினும்<br />அரசின் கொற்றம் அறநெறி முதற்றே; அதனால், நமரெனக் கோல்கோடாது, பிறர்எனக் குணங் கொல்லாது, ஆண்மையும், சாயலும், வண்மையும் உடையை ஆகி இல்லோர் கையற நீ மணலினும் பலகாலும் நீடு வாழிய எனக் கூட்டுக.<br /><br /><strong>உரை:</strong> உயர்ந்த மலையைப் பெரிய வில்லாகவும் பாம்பை நாணாகவும் கொண்டு, ஒரே அம்பில் முப்புரங்களையும் (மூன்று அசுரர்களின் பறக்கும் கோட்டைகளையும்) அழித்து, பெரிய வலிமையுடைய தேவர்களுக்கு வெற்றியைக் கொடுத்த, கரிய நிறமுடைய கழுத்தையுடைய சிவபெருமானின் அழகிய திருமுடியின் பக்கத்தில் உள்ள பிறையணிந்த நெற்றியில் உள்ள கண்போல் மூவேந்தர்களிலும் மேம்பட்ட மாலையணிந்த நன்மாறனே!<br /><br />கடிய சினத்தையுடைய கொல்லும் யானைப்படை, விரைந்து செல்லும் செருக்குடைய குதிரைப்படை, உயர்ந்த கொடிகளுடைய தேர்ப்படை, நெஞ்சில் வலிமையுடன் போரை விரும்பும் காலாட்படை ஆகிய நான்கு படைகளும் உன்னிடம் சிறப்பாக இருந்தாலும், பெருமைமிக்க அறநெறிதான் உன் ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படையாகும். அதனால், இவர் நம்மவர் என்று நடுவுநிலைமையிலிருந்து தவறாமல், இவர் நமக்கு அயலார் என்று அவர் நற்குணங்களை ஒதுக்கித் தள்ளாமல், கதிரவனைப் போன்ற வீரம், திங்களைப் போன்ற குளிர்ந்த மென்மை, மழையைப் போன்ற வண்மை ஆகிய மூன்றையும் உடையவனாகி, இல்லை என்பார் இல்லை என்னும்படி நீ நெடுங்காலம் வாழ்க! பெருந்தகையே! ஆழமான நீரையுடைய கடலின் மேல் உள்ள வெண்ணிற அலைகள் மோதும் திருச்செந்தூரில் முருகக் கடவுள் நிலை பெற்றிருக்கும் அழகிய அகன்ற துறையில் பெருங்காற்றால் திரட்டப்பட்ட கருமணலினும், நீ பலகாலம் வாழ்வாயாக.<br /><br /><strong>சிறப்புக் குறிப்பு:</strong> புலவர் மதுரை மருதன் இளநாகனார் பாண்டிய மன்னனுக்கு “நான்குடன் மாண்ட தாயினும் மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்” என்றும் ஆண்மையும், மென்மையும், வண்மையும் உடையவனாக அவன் இருத்தல் வேண்டும் என்றும் அறிவுரை கூறுவதால் இப்பாடல் செவியறிவுறூஉத் துறையைச் சார்ந்ததாயிற்று.முனைவர். பிரபாகரன்http://www.blogger.com/profile/08741873196318750290noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-178213659587445582.post-23563054045875091172011-03-04T10:01:00.000-08:002011-03-22T20:00:54.183-07:0054. எளிதும் கடிதும்!<strong>பாடியவர்:</strong> கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் (54, 61, 167, 180, 197, 394). இவர் கோனாட்டு எறிச்சிலூரைச் சார்ந்த மாடலன் என்பவனின் மகனாகையால் இப்பெயர் பெற்றிருக்கலாம். இவரால் பாடப்பட்டவர்கள்: சேரமான் குட்டுவன் கோதை, சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி, ஏனாதி திருக்கிள்ளி, ஈர்ந்தூர் கிழான் தோயன் நன்மாறன், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், சோழிய ஏனாதி திருக்குட்டுவன். இவர் இனிமையான பாடல்களை இயற்றுவதிலும், வஞ்சப் புகழ்ச்சியாகச் செய்யுள் இயற்றுவதிலும் வல்லவர்.<br /><strong>பாடப்பட்டோன்:</strong> சேரமான் குட்டுவன் கோதை (54). கோதை என்பது இவன் இயற்பெயர். இவன் சேர நாட்டின் ஒருபகுதியாகிய குட்ட நாட்டுக்குத் தலைவனாக இருந்தான். ஆகவே, இவன் குட்டுவன் கோதை என்று அழைக்கப்பட்டான்.<br /><strong>பாடலின் பின்னணி:</strong> குட்டுவன் கோதையின் கொடைச் சிறப்பையும், ஆட்சிச் சிறப்பையும், அவன் காட்சிக்கு எளியவனாக இருந்ததையும் இப்பாடலில் புலவர் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் புகழ்ந்து பாடுகிறார்.<br /><br /><strong>திணை:</strong> வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.<br /><strong>துறை:</strong> அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.<br /><br />எங்கோன் இருந்த கம்பலை மூதூர்<br />உடையோர் போல இடையின்று குறுகிச்<br />செம்மல் நாளவை அண்ணாந்து புகுதல்<br />எம்அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே;<br />5 இரவலர்க்கு எண்மை அல்லது; புரவுஎதிர்ந்து<br />வானம் நாண வரையாது சென்றோர்க்கு<br />ஆனாது ஈயும் கவிகை வண்மைக்<br />கடுமான் கோதை துப்பெதிர்ந்து எழுந்த<br />நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப்<br />10 பாசிலைத் தொடுத்த உவலைக் கண்ணி<br />மாசுண் உடுக்கை மடிவாய் இடையன்<br />சிறுதலை ஆயமொடு குறுகல் செல்லாப்<br />புலிதுஞ்சு வியன்புலத்து அற்றே<br />வலிதுஞ்சு தடக்கை அவனுடை நாடே.<br /><br /><strong>அருஞ்சொற்பொருள்:<br /></strong>1. கம்பலை = ஆரவாரம். 2. இடை = காலம் (சமயம்). 3. நாளவை = அரசன் நாட்பொழுதில் வீற்றிருக்கும் அவை (அரசவை). 5. எண்மை = எளிமை; புரவு = கொடை, பாதுகாப்பு; எதிர்ந்து = ஏற்றுக்கொண்டு. 7. ஆனாது = குறையாது. 8. கடு = விரைவு; மான் = குதிரை; துப்பு = வலிமை; எதிர்ந்து = எதிர்த்து, மாறாகத் தாக்குதல். 10. பாசிலை = பச்சிலை; உவலை = தழை; கண்ணி = மாலை. 11. மடிவாய் = சீழ்க்கை ஒலி செய்வதற்கு மடக்கிய வாய். 12. ஆயம் = ஆடுகளின் கூட்டம். 13. துஞ்சுதல் = தங்குதல்.<br /><br /><strong>கொண்டு கூட்டு:</strong> எங்கோன் இருந்த மூதூர்ப் புகுதல் இரவலர்க்கு எளிது; அவனுடைய நாடு, மன்னர் நினைக்குங் காலை இடையன் சிறுதலை ஆயமொடு குறுகல் செல்லாப் புலிதுஞ்சு வியன்புலத்து அற்று எனக் கூட்டுக.<br /><br /><strong>உரை:</strong> எம்முடைய அரசன் இருந்த ஆரவாரமான பழைய ஊரில், அந்த ஊருக்கு உரியவர்கள் போல், காலம் பாராது நெருங்கி, அரசன் வீற்றிருக்கும் நாளவைக்குள் தலைநிமிர்ந்து செல்லுதல் எம் போன்ற இரவலர்க்கு எளிது. அது இரவலர்க்குத்தான் எளிதே அல்லாமல், அவனுடைய பகைவர்களுக்கு எளிதல்ல. கோதை தன் நாட்டின் பாதுகாவலை ஏற்றுக் கொண்டு, மழை பொழியும் வானம் நாணும் வகையில் தன்னிடம் வந்தோர்க்குக் குறையாது கொடுக்கும் கவிந்த கைகளையுடைய வள்ளல். வலிமை மிகுந்த பெரிய கைகளையுடைய அவன் வலிமையை எதிர்த்து, அவன் நாட்டுக்குள் வந்த வஞ்சின வேந்தரை எண்ணும் பொழுது, அவர்களின் நிலை, பசிய இலைகளால் தொடுக்கப்பட்ட மாலையையும், அழுக்குப் படிந்த உடையையும், சீழ்க்கை அடிக்கும் வாயையும் உடைய இடையன் ஒருவன் சிறிய ஆட்டுக்குட்டிகளுடன், நெருங்க முடியாத ஒருபுலி இருக்கும் பெரிய அகன்ற இடத்துக்குள் நுழைவதைப் போன்றது.முனைவர். பிரபாகரன்http://www.blogger.com/profile/08741873196318750290noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-178213659587445582.post-21502615849915677622011-03-04T09:58:00.000-08:002011-03-04T10:01:18.538-08:0053. செந்நாவும் சேரன் புகழும்!<strong>பாடியவர்:</strong> பொருந்தில் இளங்கீரனார் ( 53). இளங்கீரனார் என்பது இவர் இயற்பெயர். இவர் பொருந்தில் என்ற ஊரைச் சார்ந்தவர். அதனால், இவர் பொருந்தில் இளங்கீரனார் என்று அழைக்கப்பட்டார். இவர் அகநானூற்றில் இரண்டு பாடல்களையும் (19, 351) இயற்றியுள்ளார்.<br /><strong>பாடப்பட்டோன்:</strong> சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. இச்சேர மன்னன், சேரன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்றும் அழைக்கப்பட்டான். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 17-இல் காண்க.<br /><strong>பாடலின் பின்னணி:</strong> இச்சேர மன்னனின் நாட்டில் இருந்த விளங்கில் என்னும் ஊரைப் பகைவர்கள் முற்றுகையிட்டு, அங்கிருந்த மக்களைத் துன்புறுத்தினர். இவன் யானைப்படையையும் குதிரைப்படையையும் கொண்டு சென்று பகவர்களை வென்று அவ்வூரில் இருந்த மக்களைக் காப்பாற்றினான். தன் வெற்றியைப் புகழந்து பாடப், பெரும் புலவர் கபிலர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மாந்தரஞ்சேரல் இரும்பொறை கூறினான். அதைக் கேட்ட புலவர் பொருந்தில் இளங்கீரனார், தான் தம்மால் இயன்ற அளவில் அவனைப் புகழ்ந்து பாடுவதாகக் கூறி இப்பாடலை இயற்றியுள்ளார்.<br /><br /><strong>திணை:</strong> வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.<br /><strong>துறை:</strong> அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.<br /><br />முதிர்வார் இப்பி முத்த வார்மணல்,<br />கதிர்விடு மணியின் கண்பொரு மாடத்து<br />இலங்குவளை மகளிர் தெற்றி ஆடும்<br />விளங்குசீர் விளங்கில் விழுமம் கொன்ற<br />5 களங்கொள் யானைக் கடுமான் பொறைய!<br />விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்;<br />மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை<br />கைம்முற் றலநின் புகழே என்றும்;<br />ஒளியோர் பிறந்தஇம் மலர்தலை உலகத்து<br />10 வாழேம் என்றலும் அரிதே; தாழாது<br />செறுத்த செய்யுள் செய்செந் நாவின்<br />வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்<br />இன்றுளன் ஆயின் நன்றுமன் என்றநின்<br />ஆடுகொள் வரிசைக்கு ஒப்பப்<br />15 பாடுவன் மன்னால் பகைவரைக் கடப்பே.<br /><br /><strong>அருஞ்சொற்பொருள்:<br /></strong>1. முதிர் = முதிர்ந்த; வார் = நெடுமையாதல், ஒழுங்கு படுதல்; இப்பி = சிப்பி. 2. பொருதல் = தாக்குதல் (கவருதல்). 3. இலங்குதல் = விளங்கல்; தெற்றி = திண்ணை. 4. விளங்கில் = ஒரு ஊர்; விழுமம் = இடும்பை ( பகைவரால் வந்த இடும்பை). 7. மம்மர் = மயக்கம்; ஒருதலை = உறுதி; கைமுற்றுதல் = முடிவு பெறுதல். 10. தாழாது = விரைந்து. 12. வெறுத்த = மிகுந்த. 13. மன் – கழிவின் கண் வந்த அசைச் சொல்.14. ஆடு = வெற்றி; வரிசை = சிறப்பு. 15. மன், ஆல் – அசைச் சொற்கள்; கடப்பு = கடத்தல் = வெல்லுதல்.<br /><br /><strong>கொண்டு கூட்டு:</strong> பொறைய, ”கபிலன் இன்றுளன் ஆயின் நன்று மன்” என்ற நின் ஆடு கொள் வரிசைக் கொப்பப் பகைவரைக் கடப்பை; யான் தாழாது பாடுவேன்; நின் புகழ் விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்; ஆதலான் எமக்குக் கைம்முற்றல; ஒளியோர் பிறந்த இம் மலர்தலை உலகத்து வாழேம் என்றலும் அரிது என மாறிக் கூட்டுக.<br /><br /><strong>உரை:</strong> முதிர்ந்து நீண்ட சிப்பியில் உள்ள முத்துப் போல் பரவிக் கிடந்த மணலில் ஒளிவிடும் மணிகளால் கண்ணைப் பறிக்கின்ற மாடங்களில், விளங்கும் வளையல்களை அணிந்த மகளிர், திண்ணைகளில் விளையாடும் விளங்கில் என்னும் ஊர்க்குப் பகைவரால் வந்த துன்பங்களைத் தீர்ப்பதற்காகப் போர்க்களத்தைத் தனதாக்கிக் கொண்ட யானைப்படையையும் விரைந்து செல்லும் குதிரைப்படையையும் உடைய பொறைய! உன் புகழை விரித்துக் கூறினால் அது நீளும்; சுருக்கமாகத் தொகுத்துக் கூறினால் பல செய்திகள் விடுபட்டுப் போகும். ஆதலால், மயக்கமுறும் நெஞ்சத்தையுடைய எம் போன்றவர்களால் உன் புகழை உறுதியாகக் கூற முடியாது. அதனால், கல்வி கேள்விகளில் சிறந்த பெரியோர்கள் பிறந்த இப்பெரிய உலகத்து வாழ்க்கையை வெறுத்து வாழ மாட்டோம் என்று கூறுவதும் இயலாத செயல். ”விரைவாகப் பல பொருள்களையும் அடக்கிய சிறந்த செய்யுட்களை இயற்றும் மிகுந்த கேள்வி அறிவுடைய , புகழ் மிக்க கபிலர் இன்று இருந்தால் நன்றாக இருக்கும்” என்று நீ கூறினாய். உன் வெற்றிச் சிறப்புக்குப் பொருந்தும் முறையில் என்னால் முடிந்தவரை உன் வெற்றியைப் புகழ்ந்து பாடுவேன்.<br /><br /><strong>சிறப்புக் குறிப்பு:</strong> “தெற்றி” என்ற சொல்லுக்குப் பெண்கள் கைகோத்து ஆடும் குரவை ஆட்டம் என்றும் பொருள் கொள்ளலாம்.முனைவர். பிரபாகரன்http://www.blogger.com/profile/08741873196318750290noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-178213659587445582.post-15558955267413544692011-03-04T09:55:00.000-08:002011-03-04T09:58:18.487-08:0052. ஊன் விரும்பிய புலி !<strong>பாடியவர்:</strong> மருதன் இளநாகனார் (52, 55, 138, 139, 349). இவரை மதுரை மருதன் இளநாகனார் என்றும் கூறுவர். இவர் பாடிய பாட்டுக்களை ஆராய்ந்து பார்த்தால் இவர் திருச்செந்தூர் அருகில் பிறந்தவராக இருக்கலாம் என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை குறிப்பிடுகிறார். இவர் மருதத்திணை சார்ந்த பாடல்களை இயற்றுவதில் வல்லவர். இவர் தந்தை பெயர் மருதன். ஆகவே, தந்தையின் பெயர் காரணமாகவும் மருதத்திணைக்குரிய பாடல்களை இயற்றியதாலும் இவர் மருதன் இளநாகனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவரது இயற்பெயர் இளநாகன். இவர் புறநானூற்றில் ஐந்து பாடல்களும், அகநானூற்றில் 23 செய்யுட்களும், கலித்தொகையில் மருதக்கலி எனப்படும் 35 செய்யுட்களும், குறுந்தொகையில் நான்கு (77, 160, 279, 367) செய்யுட்களும், நற்றிணையில் 12 செய்யுட்களும் இயற்றியுள்ளார்.<br /><strong>பாடப்பட்டோன்:</strong> பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி. இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 51-இல் காண்க.<br /><strong>பாடலின் பின்னணி:</strong> பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, தன் நாட்டை விரிவு படுத்த விரும்பிப் போருக்கு எழுவதை அறிந்த புலவர் மருதன் இளநாகனார், இப்பாடலில், அவன் போருக்குச் செல்வதை, புலி ஊன் விரும்பித் தன் குகையிலிருந்து வெளியே செல்வதற்கு ஒப்பிடுகிறார். மற்றும் அவனை எதிர்ப்பவர்களின் நாடு வளமிழந்து காடாகி அழியும் என்று அவன் போர்செய்யும் ஆற்றலை இப்பாடலில் புகழ்ந்து பாராட்டுகிறார்.<br /><br /><strong>திணை:</strong> வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.<br /><strong>துறை:</strong> அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.<br /><br />அணங்குஉடை நெடுங்கோட்டு அளையகம் முனைஇ<br />முணங்குநிமிர் வயமான் முழுவலி ஒருத்தல்<br />ஊன்நசை உள்ளம் துரப்ப, இரைகுறித்துத்<br />தான்வேண்டு மருங்கின் வேட்டுஎழுந் தாங்கு<br />5 வடபுல மன்னர் வாட அடல்குறித்து<br />இன்னா வெம்போர் இயல்தேர் வழுதி!<br />இதுநீ கண்ணியது ஆயின் இருநிலத்து<br />யார்கொல் அளியர் தாமே? ஊர்தொறும்<br />மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங்கொடி<br />10 வயல்உழை மருதின் வாங்குசினை வலக்கும்<br />பெருநல் யாணரின் ஒரீஇ இனியே<br />கலிகெழு கடவுள் கந்தம் கைவிடப்<br />பலிகண் மாறிய பாழ்படு பொதியில்,<br />நரைமூ தாளர் நாயிடக் குழிந்த<br />15 வல்லின் நல்லகம் நிறையப் பல்பொறிக்<br />கான வாரணம் ஈனும்<br />காடாகி விளியும் நாடுடை யோரே.<br /><br /><strong>அருஞ்சொற்பொருள்:<br /></strong>1.அணங்கு = தெய்வத்தன்மை (அச்சம்); அளை = குகை; முனைஇ = வெறுத்து. 2. முணங்குதல் = சோம்பல் முறித்தல்; ஒருத்தல் = ஆண் புலி (விலங்கேற்றின் பொது). 3. துரப்புதல் = தேடுதல். 5. அடல் = கொல்லுதல். 7. கண்ணுதல் = கருதல். 8. அளியர் = இரங்கத் தக்கவர். 10. உழை = இடம், பக்கம்; மருது = மருத மரம்; வாங்கு = வளைந்த; சினை = கிளை; வலக்கும் = சூழும். 11. யாணர் = புது வருவாய்; ஒரீஇ = நீங்கி, விலகி; இனி = இப்போது, இனிமேல். 12. கலி = ஆரவாரம் (முழவு ஒலித்தல்); கந்தம் = தூண். 13. பொதியில் = அம்பலம் (மன்றம், சபை). 14. நாய் = சூதாடு கருவி. 15. வல் = சூதாடுங் காய்; வல்லின் நல்லகம் = சூதாடும் இடம். 16. வாரணம் = காட்டுக் கோழி. 17. விளிதல் = அழிதல்.<br /><br /><strong>கொண்டு கூட்டு:</strong> வழுதி, அடல் குறித்து நீ கண்ணியது இதுவாயின் விளியும் நாடுடையோர் தாம் யார்கொல் அளியர் எனக் கூட்டுக.<br /><br /><strong>உரை:</strong> அச்சம் தரும் நெடிய சிகரங்களையுடைய மலையிலுள்ள குகையில் இருப்பதை வெறுத்து, சோம்பல் முறித்து எழுந்த வலிமை நிரம்பிய ஆண்புலி, இரையை விரும்பும் உள்ளத்தால் உந்தப்பட்டு, அது வேண்டிய இடத்தே விரும்பிச் சென்றது போல, வட நாட்டு வேந்தரைக் கொல்லுவதை எண்ணி, கொடிய போரைச் செய்வதற்கேற்ப நன்கு செய்யப்பட்ட தேரையுடைய வழுதி! நீ கருதியது போர் எனின் உன்னை எதிர்த்து நிற்பவர்கள் அனைவரும் இரங்கத் தக்கவர்கள். முன்பு, உன் பகைவர்களின் நாடுகளில், ஊர்தோறும் மீன் சுடுகின்ற புகையினது புலால் நாற்றம், வயல்களின் அருகே உள்ள மருதமரத்தின் வளைந்த கிளைகளைச் சூழ்ந்து இருக்கும். அத்தகைய நீர் வளமும், நிலவளமும், புதுவருவாயும் உள்ள ஊர்கள், இப்பொழுது அந்த வளமனைத்தும் இழந்து காணப்படுகின்றன. மற்றும், அந்நாடுகளில் ஆரவாரமான ஒலியுடன் விளங்கிய வழிபாட்டு இடங்களின் தூண்களிலிருந்து தெய்வங்கள் விலகியதால் வழிபாட்டு இடங்கள் இப்பொழுது பாழடைந்த ஊர்ப்பொது இடங்களாயின. அந்தப் பொதுவிடங்களில், நரையுடன் கூடிய முதியவர்கள் சூதாடும் காய்களை உருட்டிச் சூதாடியதால் தோன்றிய குழிகளில், புள்ளிகள் உள்ள காட்டுக் கோழிகள் முட்டையிடுகின்றன. உன் பகைவர்களின் நாடுகள் இவ்வாறு காடகி அழியும்.<br /><br /><strong>சிறப்புக் குறிப்பு:</strong> வழிபாடு நடைபெறும் இடங்களிலுள்ள தூண்களில் கடவுள் தங்கி இருப்பதாக நம்பிக்கை நிலவியது. உதாரணமாக, “கடவுள் போகிய கருந்தாட் கந்தம்” என்று அகநானூற்றுப் பாடல் 307-இல் கூறப்பட்டிருப்பதைக் காண்க.முனைவர். பிரபாகரன்http://www.blogger.com/profile/08741873196318750290noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-178213659587445582.post-67707252364155740792011-03-04T09:53:00.000-08:002011-03-04T09:55:12.748-08:0051. கொள்க எனக் கொடுத்த மன்னர் நடுக்கற்றனரே<strong>பாடியவர்:</strong> ஐயூர் முடவனார் ( 51, 228, 314, 399). இவர் ஐயூர் என்னும் ஊரினர். இவர் முடவராக இருந்ததார் என்பது, தாமன் தோன்றிக்கோனைச் சென்றடைந்து, வண்டியை இழுத்துச் செல்வதற்கு காளைமாடுகள் வேண்டும் என்று இவர் பாடிய பாடலிலிருந்து (399) தெரியவருகிறது. இவர் ஆதன் எழினியையும், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனையும், பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியையும் பாடியுள்ளார். இவர் அகநானூற்றில் ஒருசெய்யுளும் ( 216) , குறுந்தொகையில் மூன்று செய்யுட்களும் (123, 206, 322), நற்றிணையில் இரண்டு பாடல்களும் (206, 344) இயற்றியுள்ளார். இவர் பாடல்கள் அனைத்தும் மிகுந்த இலக்கிய நயமுடையவை.<br /><strong>பாடப்பட்டோன்:</strong> பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி. கூடகாரம் என்பது பாண்டிய நாட்டிலிருந்த ஓரூர். அவ்வூரில் இறந்ததால் இவன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி என்று அழைக்கப்பட்டான். இவன் போர் புரிவதில் பேராற்றல் கொண்டவனாக இருந்தான் என்பது இப்பாடலிருந்தும் இதற்கு அடுத்த பாடலிலிருந்தும் தெரிகிறது.<br /><strong>பாடலின் பின்னணி:</strong> பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி ஆட்சி புரிந்த காலத்தில், அவன் ஆணைக்குப் பணிந்து திறை செலுத்தி வாழாமல் அவனுடன் பகைமை கொண்டு போரிட்டவர்களின் வலிமையை அழித்து அவர்கள் நாட்டிலும் தன் ஆட்சியை நிலை நாட்டினான். அவன் வலிமையை இப்பாடலில் ஐயூர் முடவனார் பாராட்டுகிறார்.<br /><br /><strong>திணை:</strong> வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.<br /><strong>துறை:</strong> அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.<br /><br />நீர்மிகின் சிறையும் இல்லை; தீமிகின்<br />மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை;<br />வளிமிகின் வலியும் இல்லை; ஒளிமிக்கு<br />அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி,<br />5 தண்தமிழ் பொதுஎனப் பொறாஅன் போர்எதிர்ந்து<br />கொண்டி வேண்டுவன் ஆயின், கொள்கஎனக்<br />கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே;<br />அளியரோ அளியர்அவன் அளிஇழந் தோரே;<br />நுண்பல் சிதலை அரிதுமுயன்று எடுத்த<br />10 செம்புற்று ஈயல் போல<br />ஒருபகல் வாழ்க்கைக்கு உலமரு வோரே.<br /><br /><strong>அருஞ்சொற்பொருள்:<br /></strong>1. சிறை = தடை, கட்டுப்பாடு. 3. வளி = காற்று. 4. ஓர் அன்ன = ஒப்ப. 6. கொண்டி = பிறர் பொருள் முதலியவற்றைக் கொள்ளுதல் (திறை). 8. அளி = இரக்கம்; அளியர் = இரங்கத் தக்கவர்; அளி இழந்தோர் = இரக்கத்தை இழந்தோர். 9. சிதலை = கறையான். 11. உலமறல் = சுழற்சி.<br /><br /><strong>கொண்டு கூட்டு:</strong> வழுதி, தமிழ்ப் பொதுவெனப் பொறானாய்க் கொண்டி வேண்டுவனாயின், கொடுத்த மன்னர் நடுக்கற்றனர்; கொடாமையின் அவன் அளியிழந்தோர் , ஒருபகல் வாழ்க்கைக்கு உலமருவோர்; ஆதலான் அவர் அளியோரோ அளியோர் எனக் கூட்டுக.<br /><br /><strong>உரை:</strong> நீர் மிகுந்தால் அதைத் தடுக்கக்கூடிய அரணும் இல்லை; தீ அதிகமானால், உலகத்தில் நிலைபெற்ற உயிர்களைப் பாதுகாக்கக்கூடிய நிழலுமில்லை; காற்று மிகையானால் அதைத் தடுக்கும் வலிமை உடையது எதுவும் இல்லை; நீர், தீ மற்றும் காற்றைப் போல் வலிமைக்குப் புகழ் வாய்ந்த, சினத்தோடு போர் புரியும் வழுதி, தமிழ் நாடு மூவேந்தர்களுக்கும் பொது என்று கூறுவதைப் பொறுக்க மாட்டான். அவனை எதிர்த்தவர்களிடமிருந்து திறை வேண்டுவான். அவன் வேண்டும் திறையைக் ”கொள்க” எனக் கொடுத்த மன்னர்கள் நடுக்கம் தீர்ந்தனர். அவன் அருளை இழந்தவர்கள், பல சிறிய கறையான்கள் கடினமாக உழைத்து உருவாக்கிய சிவந்த நிறமுடைய புற்றிலிருந்து புறப்பட்ட ஈயலைப்போல, ஒரு பகல் பொழுது வாழும் உயிர் வாழ்க்கைக்கு அலைவோராவர். ஆகவே, அவர்கள் மிகவும் இரங்கத் தக்கவர்கள்.முனைவர். பிரபாகரன்http://www.blogger.com/profile/08741873196318750290noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-178213659587445582.post-6026379340650689132011-03-01T05:18:00.000-08:002011-03-01T05:22:42.703-08:0050. கவரி வீசிய காவலன்!<strong>பாடியவர்:</strong> மோசிகீரனார் (50, 154, 155, 156, 186). இவர் மோசி என்பவரின் மகன் என்று சிலர் கருதுகின்றனர். வேறு சிலர், இவர் மோசுக்குடி அல்லது மோசிக்குடி என்ற ஊரைச் சார்ந்தவராக இருந்ததாலும் கீரர் குடியினராக இருந்ததாலும் மோசிகீரனார் என்று அழைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். இவர் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையையும் கொண்கான நாட்டுத் தலைவனையும் பாடியுள்ளார். “நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்ற கருத்துச் செறிவுள்ள பாடல் (புறநானூறு - 186) இவர் இயற்றிய பாடல்களில் ஒன்று.<br /><br />இவர் புறநானூற்றில் நான்கு செய்யுட்களும், அகநானூற்றில் ஒரு செய்யுளும் ( 392), குறுந்தொகையில் இரண்டு செய்யுட்களும் (59, 84), நற்றிணையில் ஒரு செய்யுளும் ( 342) இயற்றியவர்.<br /><strong>பாடப்பட்டோன்:</strong> சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை. தகடூரைஅழித்து, அவ்வூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த அதியமானை வென்றதால் இச்சேரமன்னன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்று அழைக்கப்பட்டான். இவன் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்ற சேரமன்னனுக்கும் அவன் மனைவி பதுமன் தேவிக்கும் மகனாகப் பிறந்தவன். பதிற்றுப்பத்தில் 8-ஆம் பத்தில் அரிசில் கிழார் இவனைப் பாடியுள்ளார். பதிற்றுப்பத்தில் தன்னைப் புகழ்ந்து பாடியதற்குப் பரிசாக ஒன்பது நூறாயிரம் பொற்காசுகளையும், தன் அரண்மனையையும், நாட்டையும் அரிசில் கிழாருக்குப் பெருஞ்சேரல் இரும்பொறை பரிசாக அளித்தான். ஆனால், அரிசில் கிழார் இவன் நாட்டை ஆள்வதை விரும்பாமல், இவனிடத்தே அமைச்சராகப் பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது. இச்சேரன், சோழனையும் பாண்டியனையும் போரில் வென்றதாகவும் கூறப்படுகிறது.<br /><br /><strong>பாடலின் பின்னணி:</strong> ஒருகால், மோசி கீரனார் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைக் காணச் சென்றபோது களைப்பு மிகுதியால் அங்கிருந்த முரசுக் கட்டிலில் படுத்து உறங்கினார். அக்காலத்தில், முரசுக் கட்டில் புனிதமானதாகக் கருதப்பட்டது. அந்தக் கட்டிலில் யாராவது படுத்தால் அவர்களுக்குக் கடுந்தண்டனை வழங்குவது வழக்கம். அவர்கள் கொலையும் செய்யப்படலாம். ஆனால், புலவர் மோசி கீரனார் முரசுக் கட்டிலில் உறங்குவதைக் கண்ட சேர மன்னன், அவரை உறக்கத்திலிருந்து எழுப்பாமல் அவருக்குக் கவரி வீசினான். மன்னனின் செயலால் மிகவும் வியப்படைந்த புலவர் மோசி கீரனார் அவனைப் பாராட்டும் வகையில் இப்பாடலை இயற்றியுள்ளார்.<br /><br /><strong>திணை:</strong> பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.<br /><strong>துறை:</strong> இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.<br /><br />மாசற விசித்த வார்புஉறு வள்பின்<br />மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை<br />ஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார்<br />பொலங்குழை உழிஞையடு பொலியச் சூட்டிக்<br />5 குருதி வேட்கை உருகெழு முரசம்<br />மண்ணி வாரா அளவை எண்ணெய்<br />நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை<br />அறியாது ஏறிய என்னைத் தெறுவர<br />இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை<br />10 அதூஉம் சாலும்நற் றமிழ்முழுது அறிதல்<br />அதனொடும் அமையாது அணுக வந்துநின்<br />மதனுடை முழவுத்தோள் ஓச்சித் தண்ணென<br />வீசி யோயே; வியலிடம் கமழ<br />இவண்இசை உடையோர்க்கு அல்லது அவணது<br />15 உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை<br />விளங்கக் கேட்ட மாறுகொல்<br />வலம்படு குருசில்நீ ஈங்குஇது செயலே.<br /><br /><strong>அருஞ்சொற்பொருள்:<br /></strong>1. மாசு = குறை; விசித்தல் = இறுகக் கட்டுதல்; வார்பு = வார்; வள்பு = தோல். 2. மை = வயிரம்; மருங்குல் = நடுவிடம், பக்கம்; மஞ்ஞை = மயில். 3. ஒலித்தல் = தழைத்தல் (மிகுதல்). பீலி = மயில் தோகை; மணி = நீலமணி; தார் = மாலை. 4. பொலம் = பொன்; உழை = பூவிதழ்; உழிஞை = பொன்னிறமான ஒருவகைப் பூ. 5. வேட்கை = விருப்பம்; உரு = அச்சம். 6. மண்ணுதல் = கழுவுதல்; அளவை = அளவு. 7. சேக்கை = படுக்கை (தங்குமிடம்). 8. தெறு = சினம். 9. வாய் = வழி, மூலம். 10. சாலும் = சான்று. 12. மதன் = வலிமை; முழவு = முரசம்; ஓச்சுதல் = ஓட்டுதல்; 13. வியல் இடம் = அகன்ற இடம்; கமழ = பரக்க. 16. மாறு = இயல்பு, தன்மை. 17. வலம் = வெற்றி; குருசில் = குரிசில் = அரசன்.<br /><br /><strong>கொண்டு கூட்டு:</strong> குருசில், நீ இது செய்தல், இசையுடையோர்க்கு அல்லது உறையுள் இன்மை விளங்கக் கேட்ட மாறுகொல் எனக் கூட்டுக.<br /><br /><strong>உரை:</strong> குற்றமில்லாமல் வாரால் இறுக்கிக் கட்டப்பட்டு, வயிரங் கொண்ட கரிய மரத்தால் செய்யப்பட்டு, நடுவிடம் அழகாக விளங்குமாறு நெடிய மயில் இறகுகளால் அலங்கரிக்கப்பட்டு, நீலமணிகளும் பொன்னிறமான உழிஞைப் பூக்களும் அணிந்து, குருதிப்பலியை விரும்பும் அச்சம் தரும் முரசு, நீராட்டுவதற்காகக் கொண்டு செல்லப்பட்டிருந்தது. அவ்வேளையில், எண்ணெய் நுரையை முகந்து வைத்ததுபோல் இருந்த மெல்லிய மலர்க் கட்டிலை முரசுக்கட்டில் என்று அறியாது நான் ஏறிப் படுத்தேன். என் செயலுக்காக என்னைச் சினந்து, இரு கூறாக வெட்டக்கூடிய உன் கூரிய வாளால் வெட்டாமல் விடுத்தாய். நீ தமிழை நன்கு அறிந்தவன் என்பதற்கு அதுவே சான்று. அத்தோடு அமையாமல், என்னை அணுகி, உன்னுடைய வலிய, முரசு போன்ற தோளை வீசிச் சாமரத்தால் குளிர்ச்சி தரும் வகையில் விசிறியவனே! வெற்றி பொருந்திய தலைவ! பரந்த இவ்வுலகத்தில் புகழோடு வாழ்ந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு விண்ணுலகத்தில் வீடு பேறு இல்லை என்பதை நன்கு கேள்விப்பட்டிருந்ததால்தான் நீ இவ்விடத்து இச்செயலைச் செய்தாய் போலும்.<br /><br /><strong>சிறப்புக் குறிப்பு:</strong> சங்க காலத்தில், அரசர்கள் புலவர்களைப் பாராட்டி அவர்களுக்குப் பொன்னும் பொருளும் பரிசாக அளித்தது மட்டுமல்லாமல் அவர்களைப் பெரிதும் மதிப்பிற்குரியவராகக் கருதினர் என்பதற்கு இப்பாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.முனைவர். பிரபாகரன்http://www.blogger.com/profile/08741873196318750290noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-178213659587445582.post-64503243697723296892011-03-01T05:15:00.000-08:002011-03-01T05:18:49.542-08:0049. யாங்கனம் மொழிகோ, ஓங்குவாள் கோதையை?<strong>பாடியவர்:</strong> பொய்கையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 48-இல் காண்க.<br /><strong>பாடப்பட்டோன்:</strong> சேரமான் கோக்கோதை மார்பன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 48-இல் காண்க.<br /><strong>பாடலின் பின்னணி:</strong> சேரன் கோக்கோதை மார்பனின் நாடு குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நிலவளங்களெல்லாம் அடங்கியது. ஆகவே, அவன் நாடு எத்தகையது என்று எளிதில் கூற முடியாது என்ற கருத்தில் கோதையின் நாட்டைப் புலவர் பொய்கையார் இப்பாடலில் புகழ்ந்து பாடியுள்ளார்.<br /><strong></strong><br /><strong>திணை:</strong> பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.<br /><strong>துறை:</strong> புலவர் ஆற்றுப்படை. இயன்மொழியும் ஆகும்.<br /><strong>புலவர் ஆற்றுப்படை:</strong> புலவன் ஒருவன் இரவலனாக வந்த மற்றொரு புலவனை நோக்கித் தலைவனுடைய இயல்பையும் ஊரையும் தன் தலைமை தோன்றக் கூறி அவ்விரவலனை அத்தலைவனிடத்தே செலுத்துதல்.<br /><strong>இயன்மொழி:</strong> இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.<br /><br />நாடன் என்கோ? ஊரன் என்கோ?<br />பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ?<br />யாங்கனம் மொழிகோ, ஓங்குவாள் கோதையை?<br />புனவர் தட்டை புடைப்பின் அயலது<br />5 இறங்குகதிர் அலமரு கழனியும்<br />பிறங்குநீர்ச் சேர்ப்பினும் புள்ஒருங்கு எழுமே!<br /><br /><strong>அருஞ்சொற்பொருள்:<br /></strong>1. நாடு = குறிஞ்சி நிலப்பகுதி; நாடன் = குறிஞ்சி நிலத் தலைவன்; ஊர் = மருத நிலப்பகுதி. ஊரன் = மருதநிலத் தலைவன். 2. பாடு = ஓசை; இமிழ் = ஆரவாரம்; சேர்ப்பன் = நெய்தல் நிலத் தலைவன். 3.ஓங்கு = மேம்பட்ட; ஓங்குதல் = பெருமையுறல்; கோதை = சேரன். 4. புனவர் = குறிஞ்சி நில மக்கள். தட்டை = கிளி ஓட்டுங்கருவி. 5. இறங்கு கதிர் = வளைந்த கதிர்; அலமருதல் = சுழல். 6. பிறங்குதல் = ஒலித்தல், மிகுதி; சேர்ப்பு = கடற்கரை.<br /><br /><strong>கொண்டு கூட்டு:</strong> புனவர் தட்டை புடைப்பின் கழனியிலும் சேர்ப்பினும் புள்ளெழும்; ஆதலால், கோதையை யாங்கன் மொழிகோ எனக் கூட்டுக.<br /><br /><strong>உரை:</strong> தினைப்புனங்காப்போர் தட்டை என்னும் பறையை அடித்துத் ஒலி எழுப்பினால், அப்புனத்திற்கு அருகே, வளைந்த கதிர்களையுடைய வயல்களிலிலும், நீர் மிகுந்த கடற்கரையிலும் உள்ள பறவைகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து எழுகின்றனவே. சேரன் கோக்கோதை மார்பனின் நாடு குறிஞ்சி நிலமுடையதால் அவனை நாடன் (குறிஞ்சி நிலத் தலைவன்) என்பேனா? அவன் நாடு மருத நிலமுடையதால் அவனை ஊரன் (மருத நிலத் தலைவன்) என்பேனா? அவன் நாடு ஒலிமிகுந்த குளிர்ந்த கடலை உடையதால் அவனைச் சேர்ப்பன் (நெய்தல் நிலத் தலைவன்) என்பேனா? உயர்ந்த வாளையுடைய கோதையை எப்படிக் கூறுவேன்?<br /><br /><strong>சிறப்புக் குறிப்பு:</strong> தினைப்புனங்கள் குறிஞ்சி நிலத்திலும், வயல்கள் மருத நிலத்திலும், கடல் சார்ந்த நிலம் நெய்தலிலும் உள்ளவை ஆகையால் கோக்கோதையின் நாடு குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய மூன்று நிலவளங்களும் உடையது என்று புலவர் பொய்கையார் கூறுவது இப்பாடலிலிருந்து தெரிகிறது. புனவர் தட்டை புடைத்தல் குறிஞ்சி நிலத்திலும் முல்லை நிலத்திலும் நிகழ்வதாகையால், நாடன் என்பது குறிஞ்சி மற்றும் முல்லை நிலத் தலைவனையும் குறிப்பதாகக் கொள்ளலாம் என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார். ஆகவே, கோக்கோதையின் நாடு குறிஞ்சி, முல்லை, மருதம் மற்ரும் நெய்தல் ஆகிய நானில வளமும் உடையது என்ற கருத்தில் புலவர் பொய்கையார் இப்பாடலில் குறிப்பிட்டிருக்கலாம் என்றும் தோன்றுகிறது.<br /><br />இப்பாடலில் புலவர் ஒருவர் மற்றொரு புலவரை ஆற்றுப்படுத்துவதாக வெளிப்படையாகத் தெரியவில்லை. கோக்கோதையின் இயல்பைப் புகழ்ந்ததால், இப்பாடல் இயன்மொழித் துறையைச் சார்ந்ததாகக் கருதுவது பொருத்தமானதாகத் தோன்றுகிறது.முனைவர். பிரபாகரன்http://www.blogger.com/profile/08741873196318750290noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-178213659587445582.post-54089313872549989742011-03-01T05:11:00.000-08:002011-03-01T05:15:28.586-08:0048. எம்மும் உள்ளுமோ; முதுவாய் இரவல !<strong>பாடியவர்:</strong> பொய்கையார் (48, 49). இவர் இப்பாடலில், “கள்நாறும்மே கானலம் தொண்டி; அஃது எம் ஊரே” என்று கூறியிருப்பதிலிருந்து இவருடைய ஊர் தொண்டி என்பது தெரிய வருகிறது. புறநானூற்றில் இவர் பாடிய இரண்டு பாடல்களும் சேரமான் கோக்கோதை மார்பனைப் புகழ்ந்து பாடப்பட்டவையாகும். இவர் நற்றிணையில் 18 - ஆம் செய்யுளையும் இயற்றியுள்ளார்.<br /><strong>பாடப்பட்டோன்:</strong> சேரமான் கோக்கோதை மார்பன் (48, 49). இவன் சேர வேந்தருள் ஒருவன். கோதை மார்பன் என்பது இவன் இயற்பெயர் என்றும், இவன் தொண்டி என்னும் ஊரைத் தலைநகரமாகக் கொண்டு தன் நாட்டை ஆட்சி செய்தான் என்றும் அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார். இவன் நாடு குறிஞ்சி, மருதம் மற்றும் நெய்தல் ஆகிய நிலப்பகுதிகளைக் கொண்டிருந்ததாகப் புலவர் பொய்கையார், புறநானூற்றுப் பாடல் 49-இல் கூறுகிறார்.<br /><br />கோக்கோதை மார்பன் என்ற சேரமன்னன் சேரன் செங்குட்டுவனின் மகன் என்றும் இவன் குட்டுவன் கோதை, கோதை மார்பன், மாக்கோதை மார்பன், கடுமான் கோதை, செங்கோல் குட்டுவன், கடும்பகட்டியானை நெடுந்தேர்க் குட்டுவன், வலிதுஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன் முதலிய பெயர்களாலும் அழைக்கப் பட்டதாகவும் பேராசிரியர் முனைவர் கோ. தங்கவேலு தம் நூலில் குறிப்பிடுகிறார். சேரன் செங்குட்டுவனுக்குக் குட்டுவன் சேரல் என்று ஒருமகன் இருந்ததாகவும், அவனைப் புலவர் பரணர் என்பவருக்கு சேரன் செங்குட்டுவன் பரிசாக அளித்ததாகவும் பதிற்றுப்பத்தில் ஐந்தாம்பத்தின் பதிகத்தில் காண்கிறோம். சேரன் கோக்கோதை மார்பன் என்பவனும், சேரன் செங்குட்டுவனின் மகனாகிய குட்டுவன் சேரல் என்பவனும் ஒருவனா என்பது ஆய்வுக்குரியது.<br /><strong>பாடலின் பின்னணி:</strong> சேரன் கோக்கோதை மார்பனைப் பாடிப் பரிசுபெற்ற புலவர் பொய்கையார், வேறொரு புலவரைச் சேரனிடம் ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.<br /><br /><strong>திணை:</strong> பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.<br /><strong>துறை:</strong> புலவர் ஆற்றுப்படை. புலவன் ஒருவன் இரவலனாக வந்த மற்றொரு புலவனை நோக்கித் தலைவனுடைய இயல்பையும் ஊரையும் தன் தலைமை தோன்றக் கூறி அவ்விரவலனை அத்தலைவனிடத்தே செலுத்துதல்.<br /><br />கோதை மார்பிற் கோதை யானும்<br />கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்<br />மாக்கழி மலர்ந்த நெய்த லானும்<br />கள்நா றும்மே கானல்அம் தொண்டி;<br />5 அஃதுஎம் ஊரே; அவன்எம் இறைவன்;<br />அன்னோர் படர்தி ஆயின் நீயும்<br />எம்மும் உள்ளுமோ; முதுவாய் இரவல!<br />அமர்மேம் படூஉங் காலை நின்<br />புகழ்மேம் படுநனைக் கண்டனம் எனவே.<br /><br /><strong>அருஞ்சொற்பொருள்:<br /></strong>1.கோதை = சேரன், பூமாலை. 3. மா = கரிய; கழி = உப்பங்கழி, கானல் (கடற்கரைச் சோலை). 4. கள் = மலர்த்தேன்; கானல் = கடற்கரைச் சோலை. 6. படர்தல் = செல்லுதல். 7. முதுவாய் = முதிய வாய்மையுடைய. 8. அமர் = போர்; மேம்படுதல் = உயர்தல். 9. மேம்படுநனை = மேம்படுத்துபவனை.<br /><br /><strong>கொண்டு கூட்டு:</strong> இரவல, நீயும் அன்னோர் படர்குவை ஆயின், நின் புகழ் மேம்படுநனைக் கண்டனம் எனக் கூட்டுக.<br /><br /><strong>உரை:</strong> சேரன் கோக்கோதை மார்பில் அணிந்த மாலையாலும், அந்தக் கோதையைக் கூடிய மகளிர் அணிந்த மாலைகளாலும், கரிய நிறமுடைய உப்பங்கழிகளில் மலர்ந்த நெய்தல் மலர்களாலும் தேன்மணம் கமழும் கடற்கரைச் சோலைகளை உடையது தொண்டி நகரம். அது என்னுடைய ஊர். அவ்வூரில் உள்ள சேரன் கோக்கோதை மார்பன் என் அரசன். முதிய வாய்மையுடைய இரவலனே! அத்தன்மையுடை ய தொண்டி நகரத்திற்கு நீ சென்றால், என்னை நினைவில் கொள்வாயா? ”நீ போரில் வெற்றி அடையும்பொழுது உன் புகழைப் பாராட்டிப் பாடுபவனைக் கண்டேன்” என்று சேரன் கோக்கோதை மார்பனிடம் கூறுவாயாக.<br /><br /><strong>சிறப்புக் குறிப்பு:</strong> தலவனின் இயல்பையும் ஊரையும் கூறி, “ முதுவாய் இரவல எம்முள் உள்ளும்” என்று தன் தலைமை தோன்றுமாறு கூறியதால், இப்பாடல் புலவர் ஆற்றுப்படை என்னும் துறையைச் சார்ந்ததாயிற்று.முனைவர். பிரபாகரன்http://www.blogger.com/profile/08741873196318750290noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-178213659587445582.post-44417904240925375762011-03-01T05:08:00.000-08:002011-03-01T05:11:44.896-08:0047. புலவரைக் காத்த புலவர்!<strong>பாடியவர்:</strong> கோவூர் கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 31-இல் காண்க.<br /><strong>பாடப்பட்டோன்:</strong> சோழன் நெடுங்கிள்ளி. இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 44-இல் காண்க.<br /><strong>பாடலின் பின்னணி:</strong> சோழன் நலங்கிள்ளியிடமிருந்து இளந்தத்தன் என்னும் புலவன் உரையூருக்குச் சென்றான். உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த நெடுங்கிள்ளி, இளந்தத்தன் ஒருவொற்றன் என்று கருதி அவனைக் கொலை செய்ய முயன்றான். அதைக் கண்ட கோவூர் கிழார், இளந்ததத்தன் ஒற்றன் அல்லன் என்று நெடுங்கிள்ளிக்கு எடுத்துக் கூறி இளந்தத்தனைக் காப்பற்றினார். இப்பாடல் அச்சமயம் இயற்றப்பட்டது.<br /><strong></strong><br /><strong>திணை:</strong> வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.<br /><strong>துறை:</strong> துணை வஞ்சி. பிறரை வெற்றி கொள்ள நிற்பவனுக்குச் சந்து செய்வித்தல்.<br /><br />வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி<br />நெடிய என்னாது சுரம்பல கடந்து<br />வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்<br />பெற்றது மகிழ்ந்தும் சுற்றம் அருத்தி<br />5 ஓம்பாது உண்டு கூம்பாது வீசி<br />வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை<br />பிறர்க்குத் தீதறிந் தன்றோ? இன்றே, திறப்பட<br />நண்ணார் நாண அண்ணாந்து ஏகி<br />ஆங்குஇனிது ஒழுகின் அல்லது ஓங்குபுகழ்<br />10 மண்ணாள் செல்வம் எய்திய<br />நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே.<br /><br /><strong>அருஞ்சொற்பொருள்:<br /></strong>1. வள்ளியோர் = வரையாது கொடுப்போர்; படர்தல் = நினைத்தல். புள் = பறவை. 2. சுரம் = பாலைவழி. 3. வடியா = தெளிவில்லாத; வடித்தல் = தெளித்தெடுத்தல். 4. அருத்தல் = உண்பித்தல். 5. ஓம்புதல் = பாதுகாத்தல்; கூம்பல் = ஊக்கங்குறைதல். வீசுதல் = வரையாது கொடுத்தல். 6. வரிசை = சிறப்பு, மரியாதை, பாராட்டு; பரிசில் = கொடை, ஈகை. 7. திறம் = திறமை (அறிவு); திறப்படல் = கூறுபடல், தேறுதல், சீர்ப்படுதல்; நண்ணார் = பகைவர் (மாறுபட்ட கருத்துடைய மற்ற புலவர்கள்). 11. செம்மல் = தருக்கு (பெருமிதம்).<br /><br /><strong>கொண்டு கூட்டு:</strong> பரிசில் வாழ்க்கை நும்மோர் அன்ன செம்மலும் உடைத்து; ஆதலால், நண்ணார் நாண இனிது ஒழுகின் அல்லது பிறர்க்குத் தீது அறிந்தன்றோ இன்று எனக் கூட்டுக.<br /><br /><strong>உரை:</strong> வரையாது கொடுக்கும் வள்ளல்களை நினைத்து, நெடிய வழி என்று எண்ணாமல், பாலைவழிகள் பலவற்றைக் கடந்து, பறவைகள் போல் சென்று, தமது தெளிவில்லாத நாவால் தம்மால் இயன்றதைப் பாடிப் பெற்ற பரிசிலைக் கண்டு மகிழ்ந்து, பிற்காலத்துக்கு வேண்டும் என்று எண்ணி, அவற்றைப் பாதுகவாமல் உண்டு, பிறர்க்கும் குறையாது கொடுத்துத் தம்மை ஆதரிப்பவர்கள் தமக்குச் செய்யும் சிறப்புக்காக வருந்துவதுதான் பரிசிலர் வாழ்க்கை. இத்தகைய வாழ்க்கை வாழ்பவர்கள் பிறர்க்குத் தீமை செய்வதை அறிவார்களோ? அவர்கள் பிறர்க்குத் தீமை செய்யமாட்டர்கள். புலவர்கள், கல்வி கேள்விகளால் தம்மோடு மாறுபட்டவர்களைத் தம் புலமையால் நாணுமாறு செய்து அவர்களை வெற்றிகொண்டு தலை நிமிர்ந்து நடப்பவர்கள். அது மட்டுமல்லாமல், அவர்கள் உயர்ந்த புகழும் உலகாளும் செல்வமும் பெற்ற உன்னைப் போன்றவர்களைப்போல் பெருமிதம் உடையவர்கள்.<br /><br /><strong>சிறப்புக் குறிப்பு:</strong> கோவூர் கிழார் இளந்தத்தனைக் காப்பாற்றுவதற்காக நெடுங்கிள்ளியைச் சமாதானப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால், இப்பாடல் துணை வஞ்சித்துறையைச் சார்ந்ததாயிற்று.முனைவர். பிரபாகரன்http://www.blogger.com/profile/08741873196318750290noreply@blogger.com0